Showing posts with label நன்மை. Show all posts
Showing posts with label நன்மை. Show all posts
Tuesday, 18 November 2014
Monday, 17 November 2014
நன்மை.....4
வினையும்
பயனும்
நம்
முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம்,
சிலவற்றைச் செய்யக்கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும்
வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப்
பொறுத்தமாக இருந்திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக்
காலத்தில், ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக்
கொண்டது ‘சொர்க்கம்’, நரகம்’ என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள்
ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான், தீயவை செய்தால் தண்டிப்பான் என்று
ஆசைகாட்டியும், அச்சுருத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய
அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று வரும்
இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?
இன்றைக்கு
என்ன வேண்டுமென்றால், ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு’ என்ற இயற்கையின்
நியதியை (Law of Nature)
மனிதன்
உணர்ந்து கொள்ளக் கூடிய அளவிற்கு சிறுவயதிலிருந்து படிப்படியாக விளக்கி அந்த
உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். ‘இதைச் செய்தால் அதன் விளைவு
இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற
அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களைடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக்கூடிய ஒரு
உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்வி தான்
இன்றைக்கு அவசியம், செயலிலேயே விளைவு இருக்கிறது என்பது தெளிவாகும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு
ஆசை எழும் போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும் போது நல்லது அடைவோம்
என்று நன்மை செய்வான். தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த
முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். ‘வினையும் பயனும்’ என்ற
முறையிலே ஒரு தெளிவான பொறுபுணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும் அவசியம்.
Thursday, 6 November 2014
Tuesday, 4 November 2014
Monday, 3 November 2014
நன்மை.....1
எல்லாம்
நன்மையே.
துன்பத்தை
மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது
மாத்திரம் அன்று, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் வல்ல
இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுறை, அனுபவ உரை, அனுபவ ஞானம், அப்படித் தான்
எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி
எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிற போது
இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளுங்கி விடும். உண்மையில் எல்லாம்
நன்மையாகத்தான் ஏற்படும்.
அப்படிப்
பார்க்கின்ற போது துன்பம் வருகிறது என்று கவலைப் படுகின்றோமா, துன்பன் வரக்கூடாது
என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை, துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது
உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வர வேண்டும். இடம் கொடுக்க க்கூடிய மனிதனிடம்தானே வரும்.
என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்து விட்டேன் என்று
தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.
நான்
பிறந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு
மத்தியில் எவ்வளவு இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப்
போவதில்லை, உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை, நின்றால் கால்
அளவு, படுத்தால் உடலளவு, இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது
கொண்டு வருவதில்லை. போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை
அப்படியே மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன
கிடைக்கிறதோ, அது நிறைவாகத்தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால்,
எல்லோருக்கும் நிறைவாகத்தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால்
எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பது இல்லை.
Labels:
நன்மை
Subscribe to:
Posts (Atom)










