Showing posts with label strength. Show all posts
Showing posts with label strength. Show all posts

Saturday, 29 June 2024

MENTALLY STRONG

12 Signs That You Are Mentally Strong.

1. You realise that life is cool when no one knows anything about you.

2. You'll never touch a beer or a cigarette no matter how bad things get.

3. You'll put your goals ahead of cheap dopamine highs like porn and video.

4. You'll establish boundaries with others to stay away from toxic people.

5. You'll hang out with good friends who will talk about business, growth, and goals.

6. You don't let anything bother you, and you don't give a damn what other people think.

7. You will never blame your parents and will accept complete responsibility for them.

8. You will make your own decisions and will not seek approval.

9. You will increase your knowledge by reading 20 minutes per day.

10. You will prioritise your mental health over anything that causes you to feel lost.

11. You exercise 5x a week to develop a strong mindset and to embrace the struggle.

12. You will embrace self-discipline and consistency in order to change your life.

Monday, 13 October 2014

STRENGTH ...12

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...4


சுவாமி விமூர்தானந்தர்


ஆன்மிக சாதனைகள் மூலம் சக்தி!

ஆன்மிக சாதனைகள் பல உள்ளன. அவற்றுள் இறைநாம மந்திர ஜபம் முக்கியமானது. ப்ரணவம் எனப்படும் ஓம் இல்லாமல் மந்திரம் இல்லை. அதன் பொருளைப் பாரதியார் விளக்குகிறார்!

ப்ர+நவம் = ப்ரணவம். "ப்ரணவம் எனப் படுவது எப்போதும் கணந்தோறும் புதிய புதிய உயிருடன், என்றும் அழியாத அமிர்த நிலையைப் பெற்றிருப்பது என்பதாகும்." பாரதியார் கூறிய அமிர்த நிலைதான் மாறாத தன்மையு டன் கூடிய இளமைச் சக்தி ஆகும். இதுவே உயிர்ச் சக்தியு ம் ஆகும்.

அன்னை பராசக்தியிடம் இதையே அவர் திரும்பத் திரும்பப் பிரார்த்திக்கிறார்!

"...எம்மைப் புதிய உயிராக்கி..."

"நல்லதோர் வீணை செய்தே... நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்!"

உயிரோடு இருந்தபோதே பாரதியார் ஏன் "நவமென சுடர் தரும் உயிரைக்" கேட்டார்? அவர் உயிரைக் கேட்கும்போது தம்முள்ளும், தமது கருத்துகளிலும் எப்போதும் உயிர்ச் சக்தி இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதனால்தான் அவர் மக்களுக்காக உயிர் கொடுத்து உழைக்க முடிந்தது.

பாரதியின் இந்தப் பிரார்த்தனைக்கு விளக்கம் வேண்டுமென்றால், சுவாமி விவேகானந்தரின் புகழ் பெற்ற கீழ்க்கண்ட பொன்மொழிகளைச் சிந்திக்க வேண்டும்.

""யாருடைய இதயம் ஏழைகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறதோ, அவர்களையே நான் மனிதர்கள் என்பேன் மற்றவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் என்பதைவிட, இறந்து போனவர்களே.""

குன்றாத இளமை!

குமரக் கடவுள், ஆணவமிக்க சூரனை வதைக்கவே அவதரித்தார். குமரன் என்றால் குன்றாத இளமை உடையவன் என்று பொருள். ஆன்ம சக்தியை நாம் பெறாமல் இருப்பதற்கே காரணம் "நான்", "எனது" என்ற பற்றுக்களே என்று பக்தி இலக்கியங் கள் கூறும். "நான்", "எனது" பந்தங்களை யார் துறக்கிறார்களோ, அவர்கள் குமரனின் அருளைப் பெறுவர்.

பிரார்த்தனை, பூஜை, ஜபம், பாராயணம், தியானம் ஆகியவற்றின் மூலம் நாம் உயிர்ச் சக்தியை உடல், உள்ளம், அறிவு என்று எல்லாவற்றிலும் பெற முடியும். அபிராமி பட்டர் தமது அபிராமியம்மை பதிகத்தில் அபிராமியை வழிபடும் பக்தர்கள், "கலையாத கல்வியும், குறையாத வயதுமோர், கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன் றாத இளமையு ம் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும்...." பெறுவார்கள் என்று கூறுகிறார்.

சிவனைக் "குழகன்" (என்றும் இளமையாய் இருப்பவன்) என்று குறிப்பிடுகிறார் சம்பந்தர். "தம்மையே ஒக்க அருள் செய்பவர்" (திருவாய் மொழி) அல்லவா ஆண்டவர்? வயதான திருநீலகண்டரும், அவரது மனைவியு ம் சிவபெருமானின் தரிசனம் பெற்றதும் "மூப்பு நீங்கி விருப்பு றும் இளமைப் பெற்று..." என்கிறார் சேக்கிழார்.

மக்கள் மதித்துப் போற்றும் சான்றோர்கள், நம்மை நல் வழியில் தூண்டிவிடும் தலை வர்கள் யாவரும் என்றும் இளைஞர்களே! ஆம், நல்லோர் நெஞ்சங்களில் நீங் காது, நினைவுகளில் மூப்படையாமல், ஊக்கச் சக்தியாக இடம் பெற்றுள்ள அவர்கள் என்றும் இளைஞர்கள் அல்லாமல் வேறு யார்?

ஆகவே, என்றுமுள்ள இறைவனிடம் உண்மை பக்தியு டனும் ஆன்ம சக்தியு டனும் எவன் வாழ்கிறானோ, அவன் என்றும் இளமைச் சக்தி பெற்றவன். அவனே இளைஞன். ஆன்ம சக்தி பெறுவதற்கு இள வயது - முதிய வயது, ஆண்-பெண், ஏழை - பணக்காரன், படித்தவன்-பாமரன் என்று எல்லோருக்கும் வாய்ப்பு ம் தகுதியு ம் உள்ளது.

மேற்கூறிய காரணங்களால்தான் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்த ரும் இளைஞர்களைத் தேடிப் பிடித்து அன்பைப் பொழிந்தார்களோ! ஸ்ரீராமகிருஷ்ணர் தூயவர்களுக் காக தேவியிடம் பிரார்த்தித்தார். அவ்வாறே சுவாமிஜியு ம் இளைஞர்களை வேண்டினார்.
இவர்கள் இவ்வாறு விரும்பியது புதிய விஷயமல்ல. ஏனெனில் சநாதன தர்மத்தின் ரிஷிகள் செய்ததைத்தான் இவர்களும் செய்தார்கள். (சநாதன தர்மம் என்றாலே நித்திய நூதனம் அதாவது "என்றும் புதிது" என்று பொருள்.)

பரம்பொருளை உணர்ந்து, ஆனந்தமாய் உள்ள ஒரு ரிஷி, தமது ஆன்மிகப் பேரின்பத்தை நல்ல சீடர்களுடன் பகிர்ந்துகொள்ள இறைவனிடம் பிரார்த்திப்பதைப் பாருங்கள்!

"பரம்பொருளே! எனக்கு எல்லாத் திசை களிலிருந்தும் ஏராளமாக மாணவர்கள் வரட்டும். அவர்கள் பு லனடக்கமும், மனக்கட்டுப் பாடும், நல்லொழுக்கமும் உடையவர்களாகவும் இருக்கட்டும்". (தைத்திரிய உபநிஷதம்- சிக்ஷாவல்லி - 4.23)

மேற்கூறிய சிந்தனைகளிலிருந்து சுவாமிஜி வேண்டிய இளைஞர்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பதை ஓரளவிற்கு நாம் பு ரிந்து கொள்ளலாம்.
ஆகவே இளைஞர்களே, நீங்கள் உடலால், வயதால் இளைஞரா? - நீங்கள் கால் பங்கு இளைஞர் என்பதாக அறிந்து கொள்ளுங்கள்.

உணர்ச்சியால், ஊக்கத் தால் வாலிபரா?- அது அரைப் பங்கு. அன்பால், உழைப்பால், அறிவுத் தாகத்தால் நீங்கள் துடிப்பானவரா?- முக்கால் பங்கு இளமை உங்களிடம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் மேற்கூறியவை இருந்தால் மட்டும் இளமையாக இருக்கிறீர்கள் என்றும், அந்தக் கால கட்டம்தான் இளமைக் காலம் என்ற முடிவுக்கும் வந்தால், அது ஒரு மேலோட்டமான பு ரிதலாகத் தான் இருக்கும்.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்களே, உடல், மனம் போன்றவற்றுள் மட்டும் சக்தி பெறுவதற்காக உங்களுள் பலரும் பாடுபடுகிறீர்கள் அது நல்லதுதான்.

ஆனால் சுவாமிஜி நம்மிடம் வேண்டுவது நாம் அனைவரும் ஆன்ம சக்தியைப் பெற வேண்டும் என்பதே ஆகும். அதற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

அதனால்தான் சுவாமிஜி, "எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடை யு ம்வரை இடைவிடாது செல்லுங்கள்" என்று முழங்கினார்.

Saturday, 11 October 2014

STRENGTH ...10

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...2


சுவாமி விமூர்தானந்தர்


இளமை பற்றிய இரண்டு பிரச்னைகள்

ஒரு மனிதனின் இளமைப் பருவம் என்பது 15 முதல் 30 வயது வரைதான். அந்தக் காலகட்டத்தில் பொதுவாகப் பலரும் பெற்றோரைச் சார்ந்தே இருக்கிறார்கள் அல்லது பொறுப்பு களைச் சுமக்கத் தைரியமின்றியோ, அனுபவமோ, வாய்ப்போ இன்றி இருக்கிறார்கள் அல்லது அப்போதுதான் சம்பாதிக்கத் தொடங்கிச் சொந்தக் காலில் ஓரளவிற்கு நிற்கிறார்கள்.

பெரும்பாலான பக்தர்கள், ஆன்மிகத்தில் விருப்பம் கொள்ளும் நல்லவர்கள் பலரும் 30 வயதிற்குப் பிறகே ஆன்மிகத்தின் பக்கம் திரும்புகிறார்கள். அவர்களுக்கு அப்போதுதான் ஆன்மிக வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ம், உண்மையான தேவையு ம் வருகிறது.

இளைஞர்கள் பலரின் நிலைமை இப்படி இருக்கும்போது சுவாமிஜி தமக்கு இளைஞர்கள் வேண்டும் என்கிறாரே, ஏன்?

மற்றுமொரு பிரச்னை. "சுவாமிஜி பணித்தப் பணிகளைச் செய்ய எங்களுக்கு வாய்ப்பில்லையா? அல்லது தகுதி தீர்ந்துவிட்டதா?" என்று நடுத்தர மற்றும் மூத்த வயது அன்பர்களின் நெஞ்சங்களில் ஒரு கேள்வி நிழலாடுகிறது. இதற்குப் பதிலளிக்க,இளமைப் பருவம் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியு ள்ளது.

வாலிபம் என்பது வயது, ஆரோக்கியம், மன வளர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் என்றால், சில வருடங்களே நிற்கக்கூடிய அந்த வாலிபத்தைக் கொண்டு பெரிதாக என்ன சாதித்து விட முடியும்?

நமது ஆன்மிக நூல்கள் பிரச்னைக்குரிய இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கின்றனவா? ஆம்! "உடல் அழியக் கூடியது மனம் சிதையக் கூடியது அறிவு மங்கிவிடும் வசதி, வாய்ப்பு , ஆரோக்கி யம் எல்லாமே மாயை" என்று மட்டும் அவை சொல்லவில்லை.

தொடர்ச்சியாக ஒன்று செம்மையாகச் செயல்பட, நிலையான ஒன்று அதற்குப் பின்பு லமாக இருக்க வேண்டும். வெள்ளித்திரை இருந்தால்தான் சினிமா. அதே போல் நமது வாழ்வில் தோன்றி மறையு ம் அம்சங்கள் எத்தனை எத்தனையோ! அவற்றிற்கெல்லாம் ஆதாரமாக, நிலையான பரமாத்மா - இறைவன் - வீற்றிருக்கிறார்.

இறைவன் இருப்பதால் இருக்கிறோம்!

Friday, 10 October 2014

STRENGTH ...9

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...1


சுவாமி விமூர்தானந்தர்

சுவாமி விவேகானந்தர், ""நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். உலகின் போக்கையே மாற்றிக் காட்டுகிறேன்"" என்றார். எல்லாக் காலங்களிலும் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது உலகிற்குச் சேவையாற்ற ஏன் சுவாமிஜி இளைஞர்களை அதிகமாக வேண்டினார்?

அவர் விரும்பிய இளைஞர்கள் (அதில் பெண்களும் அடக்கம்) எப்படிப்பட்டவர்கள்? அவர் களின் தகுதிகள் என்ன என்பதைச் சிறிது ஆராய்வோம்.

இளமையைத் துறந்தால் பெருமையா?

இளமையை வேண்டாம் என்றார் ஒருவர் இறையடியார் என்று அவரைப் போற்றுகிறோம். இது காரைக்கால் அம்மையார் சரித்திரம். இளமையை வேண்டி இன்பங்களை அனுபவித்தார் மற்றொருவர் கடைசியில், மன அமைதி பெறுவதற்காகத் தாம் விரும்பிப் பெற்ற இளமையை வேண்டாம் என்றார். இது யயாதியின் கதை.

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்க்கையே நீர்க்குமிழி என்றால், அதிலுள்ள இளமைக் காலம் எம்மாத்திரம்?

ஆதிசங்கரர், ஆன்மஞானம் அடைய முயலாதவர்களை, அக்ஞானத்தில் உழல்பவர்களைப் "பாலர்களே" என்று விளிக்கிறார்.

"இந்தக் காலத்து இளைஞர்கள் அவ்வளவாகப் பொறுப்புடன் இல்லை" என்று பொதுவாகப் பெரியவர்கள் கூறுவதுண்டு. இதே புகாரை, சாக்ரடீஸே ஒரு முறை கூறினாராம்!

இப்படிப் பலரும் இளைஞர்களையும், இளமைக் காலத்தையும் பெரிதாக மதித்ததாகத் தெரியவில்லை! ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும், அவர்கள் எல்லோரையும் சமமாக பாவித்தாலும் குறிப்பாக, இளைஞர்களின் ஆற்றலில் அதிக நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அது ஏன்?

ஒவ்வொரு கணமும் நூற்றுக்கணக்கான திசுக்கள் நம் உடலில் அழிந்து கொண்டும், புதிதாகப் பிறந்து கொண்டும் இருக்கின்றன. அதன்படி, மனிதன் ஒவ்வொரு கணமும் பிறக்கிறான் இறக்கிறான். மனிதனின் இந்தப் பிறப்பிறப்பின் வேகம் சற்று கூடுதலாக, சீராக இருப்பதைத்தான் இளமைக் காலம் என்கிறோம். இதனைக் "கிளரொளி இளமை" என்று திவ்யப் பிரபந்தம் கூறும்.

அப்படி என்றால், யாரிடம் இளமைத் துள்ளல் உள்ளதோ, அவரே இளைஞர் என்று கூறி விடலாமா? அப்படிக் கூறிவிட முடியாது. ஏனென்றால் துருதுருவென செயல் புரிந்த வயதான "இளைஞர்கள்" இருந்தார்கள் ஏராளமாக- காந்திஜி, வினோபாஜி போன்றோர். இருக்கிறார்கள் தாராளமாக - அன்னா ஹசாரே, சின்னப்பிள்ளை போன்றோர். இருப்பார்கள் நிச்சயமாக!

வாலிபம் வயது அடிப்படையில் இல்லை என்பது இதன் மூலம் முடிவாகிறது அல்லவா?

மனதிற்கு இளமை என்ற நிலை உள்ளதா? உறுதி எடுக்கும் ஒரு கணம் ஏன் எடுத்தோம் என்று தடுமாறும் மறுகணம். இதுதான் மனம். ஆகையால் பிடிப்பும் தளர்வும் இயல்பாக உள்ள மனம் எப்போதும் துடிப்பாக - இளமையாக இருக்க முடியாது.

மனித மனமானது அளவற்ற ஆற்றலுடன், சோர்வின்றிச் செயலாற்ற இயலும். ஆனால், சக்தியின் ஊற்று அதற்கு வேறோர் இடத்திலிருந்து உதிக்கிறது.

உடல் ஒரு சில காலம் வரையில்தான் இளமையாக இருக்கும். மனதால் என்னதான் உற்சாகமாக இருக்க முயன்றாலும், அதுவும் காலப்போக்கில் மங்கத்தான் செய்கிறது. ஊக்கத்தால், மருந்து களால், ஏன் ஆசனங்களால் கூட நீடித்த இளமையைத் தர முடியாது.-

---தொடரும் 

Thursday, 9 October 2014

STRENGTH ...8

ஆன்ம பலத்தை வளா்த்துக்கொள்ள -




“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே”
- சுவாமி விவேகானந்தா்


“துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே”
- பெஞ்சமின் பிராங்கிலின்


“எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது”
- ஆபிரகாம் லிங்கன்


“எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவா்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பாா்த்ததில்லை என்று பொருள்”
- ஆல்பா்ட் ஜன்ஸ்டைன்


“சிறிய தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிா்க்க முடியாது”
- கன்ஃபூசியஸ் 


Sunday, 13 October 2013

STRENGTH ...4

There’s an old fable about a grumpy old goose that approached
a horse in a paddock. “I am certainly a more
noble and perfect animal than you,” the goose hissed,

“For the whole range and extent of your faculties is

confined to one element. However, I can walk upon the
ground, just as you do, as well as take to the air with
my wings and when it pleases me; I can land on a pond
or lake, refreshing myself in the cool waters. I enjoy
the different powers of a bird, a fish and a quadruped”

The horse snorted disdainfully and replied, “It is true that you inhabit three elements, but you are not particularly distinguished at any of them. You fly, but your

flight is so heavy and clumsy that you have no right to put yourself on a level with the lark or swallow. You can swim on the surface of the waters, but you cannot live in them as the fish do, you cannot find your food in that element, nor
glide smoothly along the bottom of the waves. And when you walk, or rather waddle, upon the ground, with your broad feet and your long neck stretched out, hissing at everyone who passed by, you bring upon yourself the derision of all beholders”

“I confess that I am only formed to move along the ground,” the horse continued,


“But how graceful is my make! How well turned my limbs! How highly finished my whole body! How great my strength! How astonishing my speed! I would rather be confined to one element, and be admired in that, than be a goose in all!”


This wonderful fable is a great reminder that your success lies in maximising your strengths and finding ways to utilise them effectively, rather than attempt to become a jack of all trades, but master of none.


So let me ask you a couple of questions today:


• What are your strengths?


• How are you going to develop them to world-class standards and, what are you going to do with them?

Friday, 11 October 2013

STRENGTH .....3


WITHIN YOU IS THE STRENGTH
TO MEET LIFE'S CHALLENGES

You are stronger than you think
REMEMBER to stand tall.


Every challenge in your life
Helps you to grow.


Every problem you encounter
Strengthens your mind and your soul.


Every trouble you overcome
Increases your understanding of life.


When all your troubles weigh heavily
On your shoulders,
Remember that beneath the burden
You can stand tall because you are never
Given more than you can handle
And you are stronger
Than you think.
~ Lisa Wroble ~

Monday, 7 October 2013

STRENGTH ....2


Check the story below and convert your Weaknesses into your Strengths .....

Sometimes your biggest weakness can become your biggest strength...

A 10-year-old boy decided to study judo despite the fact that he had lost his left arm . The boy began lessons with an old Japanese judo master. The boy was doing well, so he couldn't understand why, after three months of training the master had taught him only one move.

"Sensei," the boy finally said, "Shouldn't I be learning more moves?". "This is the only move you know, but this is the only move you'll ever need to know," the sensei replied.

Not quite understanding, but believing in his teacher, the boy kept training . Several months later, the sensei took the boy to his first tournament.

Surprising himself, the boy easily won his first two matches.
The third match proved to be more difficult, but after some time, his opponent became impatient and charged; the boy deftly used his one move to win the match. Still amazed by his success, the boy was now in the finals.


This time, his opponent was bigger, stronger, and more 
experienced. For a while, the boy appeared to be overmatched. Concerned that the boy might get hurt, the referee called a time-out. He was about to stop the match when the sensei intervened.

"No," the sensei insisted, "Let him continue."

Soon after the match resumed, his opponent made a critical mistake: he dropped his guard. Instantly, the boy used his move to pin him. The boy had won the match and the tournament. He was the champion.

On the way home, the boy and sensei reviewed every move in each and every match. Then the boy summoned the courage to ask what was really on his mind.

"Sensei, how did I win the tournament with only one move?"

"You won for two reasons," the sensei answered.

"First, you've almost mastered one of the most difficult throws in all of judo and second, the only known defense for that move is for your opponent to grab your left arm."

The boy's biggest weakness had become his biggest strength.!!! 

" Winners Never Quit...."

Saturday, 5 October 2013

STRENGTH ....1


The strength of a man

The strength of a man isn't seen in the width of his shoulders. 


It's seen in the width of his arms that circle you.

********

The strength of a man isn't in the deep tone of his voice. 

It's in the gentle words he whispers. 

********

The strength of a man isn't how many buddies he has. 

It's how good a buddy he is with his kids. 

********

The strength of a man isn't in how respected he is at work. 

It's in how respected he is at home. 

********

The strength of a man isn't in how hard he hits.

It's in how tender he touches. 

********

The strength of a man isn't in the hair on his chest. 

It's in his Heart... that lies within his chest.

********

The strength of a man isn't how many women he's loved. 

It's in how he can be true to one woman.

********

The strength of a man isn't in the weight he can lift. 

It's in the burdens he can carry....