Tuesday, 5 June 2012

ரூபாய் மதிப்பு சரிவு


வாஸ்துதான்   காரணம்!

ரூபாய் மதிப்பு சரிவுக்கு நிதி நிபுணர்கள் பல காரணங்களை அலசிக் கொண்டிருக்க, அதன் புதிய சின்னத்தில் உள்ள வாஸ்து குறைபாடுதான் காரணம் என்கிறார் ஒரு நிபுணர். அமெரிக்க டாலர் உட்பட அன்னிய கரன்சிகளுக்கு இணையான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2010ல் ரூ.47 ஆக இருந்த ஒரு டாலர் இப்போது ரூ.56 ஆக இருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, நிதி நிபுணர்கள் பல காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 2010ல் அறிமுகமான ரூபாய் சின்னத்தில் உள்ள வாஸ்து குறைபாடுதான் காரணம் என்கிறார் ராஜ்குமார் ஜான்ஹரி. பிரபல வாஸ்து நிபுணரான அவர், 2010ல் ரூபாய் சின்னம் அறிமுகமான போதே அதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறுகிறார். அவரது கருத்து இதோ: ரூபாய் சின்னம்ஆர்என்ற ரோமானிய எண் மற்றும் இந்தியில் பயன்படுத்தப்படும்ராஎன்ற எழுத்துக்கான தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. அதன் நடுவே இருக்கும் கோடு, வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி. அது ரூபாயை வெட்டிச் செல்வது போலிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியம் தரப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரத்திற்கு எதிராக ரூபாய் சின்னம் இருப்பதால் ஆபத்து என்று அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. நடவடிக்கையும் இல்லை. ரூபாய் சின்னம் அறிமுகம் ஆன 2010ல் இருந்தே கரன்சி மதிப்பு சரிய தொடங்கியது. அது இன்று வரை நீடிப்பதே இதற்கு சாட்சி. ரூபாய் மதிப்பு சரிவுக்கு சர்வதேச காரணங்கள் பலவற்றை கூறலாம். ஆனால், 2009ல் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி உட்பட இதற்கு முன் எத்தனையோ சூழ்நிலைகளிலும் ரூபாய் மதிப்பு இதுபோல சரிந்ததில்லை. இதிலிருந்தே ரூபாய் சின்னத்தில் உள்ள வாஸ்து குறைபாடு உண்மை என்பது புரியும். எனவே, ரூபாய் சின்னத்தை உடனடியாக திரும்ப பெற்று குறைபாடு இல்லாமல் வேறு உருவாக்க வேண்டும். இவ்வாறு ராஜ்குமார் ஜான்ஹரி கூறினார். ரூபாய் சின்னத்தை வடிவமைத்த சென்னையை சேர்ந்த உதய குமார் இதுபற்றி கூறுகையில், ‘நான் என்ன சொல்வது... 2 ஆண்டுக்கு முன்பே முடிவானது. இப்போது   அப்படி சொல்வதா? எதுவானாலும் அரசே முடிவு செய்ய வேண்டும்என்றார்.

Monday, 4 June 2012

மனவளக்கலை கிராமம்


குடிகாரர்களும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை: ஆச்சர்யப்படுத்தும் யோகா கிராமம் 



மதுபான விற்பனை மூலம் 20 ஆயிரம் கோடி ரூபா# வருவாய் இலக்கு வைத்து தமிழக அரசு சுறுசுறுப்பாகச் செயல்படும் அதே வேளையில், அஜ்ஜிப்பட்டி கிராம மக்கள், யோகா பயிற்சி மூலம் குடிக்கு அடிமையானவர்களை திருத்தி, நல்வழிப்படுத்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதனால், அந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் அறவே குறைந்து உள்ளதாக, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜருகு ஊராட்சியில், அஜ்ஜிப்பட்டி என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 800 வீடுகளில் கிட்டத்தட்ட 1,200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர், அரசு பள்ளி வளாகத்தில் தினமும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு, குடிமையங்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மாமிசம் ஊர் கட்டுப்பாட்டின்படி, தடை செய்யப்பட்டு உள்ளது.

முதல் அச்சாரம்:இந்த யோகா புரட்சியைத் தொடங்கி வைத்தவர், அஜ்ஜிப்பட்டியை சேர்ந்த, போலீஸ் குற்றப்பரிவு, சப் இன்ஸ்பெக்டர், வெங்கடேஷ். தன் சொந்த பிரச்னைகளைச் சமாளிக்க யோகாவை நாடியவர், அதன் பயனை அனுபவித்த பின், அதை பரப்பத் துவங்கினார்.

இது குறித்து, அவர் கூறுகையில், ""நான் தர்மபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்தபோது, தினம்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் புகார் கொடுக்க வந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. என்னுடன் பிறந்தோர் குடும்பங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும் எனக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும்,'' என்றார்.

மேலும், ""இதைத் தவிர்க்க, ஆழியாறு வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்தில், யோகா பயிற்சி பெற்று , அதை பின்பற்ற ஆரம்பித்தேன். அதனால், மனதளவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் இதையே என் குடும்ப பிரச்னைகளுக்கான தீர்வாக எடுத்துக் கொண்டேன். என் உறவினர்களிடம் யோகாவின் அவசியத்தை உணர்த்தினேன். அங்கும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இன்று எங்கள் குடும்பம் மட்டும் அல்லாது, ஊரே யோகா மூலமாக நல்வழியில் நிமிர்ந்து நிற்கிறது,'' என்றார்.

காலை எழுந்ததும்...:அஜ்ஜிப்பட்டியில், யோகா, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி உள்ளது. அதன் பயனை அனுபவிக்கும் மக்களும், இடையறாது பயிற்சி செய்து, அறவாழ்வை பராமரித்து வருகின்றனர்.இங்கு உள்ள அனைத்து வீடுகளின் முகப்பிலும் யோகா குறித்த வாசக அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கிறன. புதிதாக எந்த மனிதரை எதிர்கொண்டாலும், வணக்கத்திற்கு பதில், "வாழ்க வளமுடன்' என்ற வாசகம் வாழ்த்துகிறது.இங்கு எவரிடமும், எதற்கும் பதட்டமில்லை, எந்த அவசரமும் இல்லை. எல்லாவற்றையும் பொறுமையாகவும் நேர்த்தியாகவும் செயல்படுத்துகின்றனர். அதிகாலை நான்கு மணிக்கு, இங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் கூடும் மக்கள், காலை ஆறு மணி வரை மொத்தமாக யோகாசன பயிற்சி செய்கின்றனர். பின்னர் தான், கூலி வேலைக்கு செல்வது, காட்டு வேலைகளை பார்ப்பது என, தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடங்குகின்றனர்.வேலையை முடித்துவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்த பின்னர் சிறிது ஓய்வெடுத்து விட்டு, மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை யோகா பயிற்சி செய்கின்றனர், பின்னர் ஒன்பது மணிக்கு தூங்கச் செல்கின்றனர். இப்படியாக இவர்களின் அன்றாட வாழ்வு அமைந்து உள்ளது.

திருந்திய குடிகாரர்கள்:இங்கு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளனர். முதலில், இவர்களில் ஐந்து பேரை தேர்வு செய்து, யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு மாற்றம் ஏற்பட்டு, குடியை விட்டவர்கள், இன்று அதன் வாடை வந்தாலே காததூரம் ஓடுகின்றனர். அப்படி திருந்தியவர்களில் ஒருவர் வடிவேலு, 74.

அந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,
""விவரம் தெரியாத 14 வயதிலிருந்து குடித்து வந்தேன். யோகா பயிற்சிக்கு ஐந்து நாட்கள் பொள்ளாச்சிக்கு அனுப்பிச்சாங்க. இப்ப அந்த கருமத்தோட நாத்தம் வந்தாலே அந்த இடத்தில் நிக்க மாட்டேன்,'' என்றார். எட்டு வயதில் இருந்து குடித்து வந்த, பழனி, குடிகாரர்களை கண்டாலே வெறுப்பு வருகிறது என்கிறார்.இப்படி ஒவ்வொருவராக திருந்தி, இங்கு குடி என்ற வார்த்தையைக் கூட கேட்க முடிவதில்லை. கடைகளில் பீடி, சிகரெட் விற்பனையும் இல்லை.

சாதிக்கும் மாணவர்கள்:இங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜருகு ஊராட்சியைச் சுற்றி உள்ள, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள், இங்கு பயிற்சி எடுத்து செல்கின்றனர்.சென்ற முறை பிளஸ் 2 வகுப்பில் 68 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த முறை 78 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

யோகா பயிற்சியின் மூலம் படிப்பில் முன்னேற்றம் கண்ட மாணவர், பிரபாகரன் கூறுகையில், ""காலை நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்த பின்னர் படிப்பதால் மனதில் பசுமரத்தாணி போல பதிகிறது. அதிகாலையில் எழுவதால், படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அதுவே இம்முறை நான் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு காரணம்,'' என்றார்.

குற்ற செயல்கள்:கிராமங்களும், தெரு சண்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் இங்கு ஊரே அமைதிப் பூங்காவாக இருக்கிறது.ஆரம்பத்தில் யோகா பயிற்சி பெற்று, தற்போது, யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கும், ஸ்ரீதேவி கூறுகையில், ""கிராமத்தில் உள்ள அனைவரும் யோகா செய்வதன் மூலம் எங்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை வந்து விட்டது. இப்பயிற்சி கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பிரச்னை ஏற்படுவதில்லை. குறிப்பாக குழாயடியிலோ, தெரு முனையிலோ சண்டை போடுவதில்லை,'' என்றார்.

மேலும், ""உங்க மண் வெட்டியையோ, கடப்பாரையையோ இங்கே விட்டு செல்லுங்கள். நாளை அதே இடத்தில் இல்லை என்றால் நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என, ஊரில் தனிநபர் ஒழுக்கம் பற்றி பெருமையாக சவால் விடுத்தார்.

அடிப்படையிலேயே மக்கள் ஒழுக்கமாக இருப்பதால், பெரும்பாலான குற்றச்செயல்கள் நிகழ்வதில்லை என்கின்றனர், இந்த ஊர் மக்கள்.

                                                                                                     நன்றி - தினமலர்

Sunday, 3 June 2012

இன்று படித்தது - 1


பத்துக் கட்டளைகள்
                         சுஜாதா 


வயது வந்தவர்களுக்கு ! 
உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட்தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் கலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ள்ஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவின விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளஞ்யே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமைஎன்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம்தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸ்னஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச்சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜால் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

Saturday, 2 June 2012

WEEKEND WISDOM



Put Some "Wow" in Your Personality!
  Chris Widener

What is "wow?" Well, you know when you come out of a meeting or party after just meeting someone for the first time and you say, "Wow. Tom was a really great guy." That is "wow."

"Wow" isn't terribly difficult and the good news is that almost anybody can become "wow" if they work at it. And the best news about "wow" is that when it is coupled with excellent skills and a strong character, it will boost your success incredibly. Why? Because people want to be around "wow" people. They want to follow "wow" people. They want to help "wow" people.

So let's talk a little bit about how to put a little "wow" into your personality. Here are my top tips:

Care. I mean really care. The rest of these can be vacant if someone who just doesn't care about others does them. The first thing we can do to get some "wow" is to genuinely care about others. In this day and age, just caring will draw people to you and make them say, "wow."

Smile. I love a smiling person. It shows happiness and freedom. It is something that draws you to another person. I would suggest that you practice smiling if you have to. Stand in front of the mirror and get used to it! Now when you meet people, be sure to smile. When they leave they will say, "Wow, she was a friendly person!"

Ask questions.
There is nothing worse than John "Let me tell you a story about myself" Smith. No, a "wow" personality learns to ask questions about the other person they are engaged in conversation with. People love to talk about themselves, right? So why not give them the chance! Be sincerely curious about their lives, family and work. In doing so, you will create some "wow."

Look them in the eyes. Looking at someone in the eyes is a core of a "wow" personality. It is about trust, honesty and connection. When you can't or don't look someone in the eyes they don't think "wow," they think "I wonder why he can't look me in the eyes."

Gain a broad base of knowledge.
The more topics you can carry on a basic conversation about the more "wow" you will instill into the next meeting or party you go to. Now I am not saying you should gain knowledge for knowledge's sake or so you can "wow" someone so you can sell him or her something. My thought is that we live in such a wonderful, magnificent world that I LOVE to learn all I can about its diversity and the diversity of the people who inhabit it. And when you can bring that knowledge to the table, you'll get the "wow" you've been waiting for.

Compliment people sincerely.
You can always find something to compliment someone on. I am not talking about false flattery but something that you truly respect and admire about someone. Compliment someone in the right way and you will find them saying, "Wow, I like that person!"

Don't take yourself too seriously.
People who take themselves too seriously never hear "wow," except as in "Wow, he needs to loosen up." That isn't the kind of "wow" we are looking for. We are looking for the kind of "wow" that comes from people knowing that we are just ordinary people (who achieve extraordinary things of course!) You want people to say, "Wow, she's really down to earth for being so successful."


Want some "wow" in your personality? Try some of the above on for size. Work hard to make them a part of your life and see if you don't find others saying, "WOW!" a little more often! 

கூந்தல்



மாலாவோட கூந்தல் பத்தி படிச்ச என்னோட ஃபிரெண்டு அந்த காலத்துல பெண்களோட கூந்தலை எப்படி எல்லாம் உவமைப் படுத்தியிருக்கங்கன்னு 

ஒரு தமிழ்ப் பாடல் அனுப்பியிருக்காரு.. 

 இந்த பாடலை இயற்றியவர்
தவத்திரு தண்டபாணி சுவாமிகள்

கார்மணல் ஓட்டமும், பாசிக் கொத்தும்,
மேகமும், இருளும், விரிமலர்ச் சோலையும்,
வண்டுக் கூட்டமும், மற்று ஓர் விதப் பனை
காய்த்து உள கொத்தும் கரும் குழலுக்கு இணை; அது
பின்உறில் கொன்றைக் காய் எனப் பிறங்கும்,
அவிழ்ப்பு உறில் அகத்திக் காய்க் கொத்து அனையதாம்

பெண்களின் கரும் கூந்தலுக்கு எதையெல்லாம் உவமையாகச் சொல்லலாம்?

·         ஆற்று ஓரத்தில் படிந்துள்ள கருப்பு மணல்
·         கடல் பாசிக் கொத்து
·         மேகம்
·         இருள்
·         மலர்கள் நிறைந்த சோலை
·         வண்டுக் கூட்டம்
·         ஒரு வகைப் பனையின் கொத்தான காய்கள்
·         அந்தக் கூந்தல் பின்னிவிடப்பட்டால், கொன்றைக் காய்போல் இருக்கும்
·         பின்னாமல் அவிழ்த்துவிடப்பட்டால், அகத்திக் காய்க் கொத்துபோல் இருக்கும்



எனக்கு இந்த உவமைகள்   ஒண்ணு கூட பிடிக்கல..! 





Friday, 1 June 2012

சூரத்

Surat  Diamond


இந்த தடவை குஜராத்  சூரத்ல மூணு நாள் தங்கியிருந்தேன்..

வருசத்துக்கு 50000  கோடி ரூபாய்க்கு துணி, வைரம் பிசினஸ் இங்க  நடக்குது..
உலகத்துல வெட்டி எடுக்குற வைரக்கற்களை பட்டை தீட்டுற வேலை 80 % சூரத்துலதான் நடக்குது.. நாள் ஒண்ணுக்கு ஆறு கோடி மீட்டர் துணி இங்க உற்பத்திப் பண்ணப்படுது. இந்த செய்தியெல்லாம் தங்கியிருந்த ஹோட்டல்ல இருந்த புக்ல படிச்சேன்..

அல்போன்சா மாம்பழம் சூரத்தை சுத்தியுள்ள இடங்கள்ள நெறையா விளையுது..!

இந்தியாவுல ரொம்ப சுத்தமான நகர்ன்னு  சூரத் பேர் வாங்கியிருக்கு..!

Old  Bombay Market

ஹசீராங்கிற இடத்துல நாங்க மீட்டிங் வந்ததால பேருக்குத்தான் சூரத்துல தங்கியிருந்தோம்அல்போன்சா சாப்பிடக்கூட  வாய்ப்பே கிடைக்கல.  இருந்தாலும் குஜராத் மீல்ஸ் சாப்பிடும்போது மாம்பழச்சாறு குடிக்க
கொடுத்துக்கிட்டே இருந்தாங்க..!

கடைசி நாள் இங்க இருக்குற 30000  ஜவுளி கடைகள்ல ஒரு கடையில நுழைஞ்சு மாலாவுக்கு சுடிதார் மெட்டீரியல் வாங்கி இந்த ட்ரிப்பை ரொம்ப safe  முடிச்சேன்!

Goal Setting

One of my friends has sent me the following after reading the ' Midweek Inspiration ' ( 23rd May post )


Setting Means Getting
by Tom Hopkins
The average human being has the ability to achieve almost anything. Lack of basic capability is rarely the problem, but rather finding out what you want and being willing to sacrifice, change, and grow to satisfy the want.
In the sales training seminars I conduct throughout the country, I teach a 20-step system of goal setting to help people achieve and I firmly believe it can be applied to all walks of life.

Here it is:
1. If it's not in writing, it's not a goal. An unwritten
want is a wish, a dream, a never-happen. If it's in writing,
it's a commitment.
2. If it's not specific, it's not a goal. Broad desires and
lofty aims have no effect. It must be concrete.
3. Goals must be believable. If you don't believe you can
achieve a goal, you won't pay the price for it.
4. An effective goal is an exciting challenge. It must
demand your best and a bit more or it isn't going to change
your ways and elevate your lifestyle.
5. Goals must be adjusted to new information. Adjust them
down if they become unbelievable or up if they're too easy.
6. Dynamic goals guide our choices. If you want it badly
enough, you'll turn off the TV and get to it. Goals will
show you the right way to go on most decisions.
7. Don't set short-term goals for more than 90 days. If you
set a short-term goal that takes more than 90 days, you may
lose interest.
8. Maintain a balance between long-term and short-term
goals. Long-term goals tend to be hidden in a fog of the
future, so have some short-term goals - like clothes, cars,
vacations - to keep your excitement up.
9. Include your loved ones in your goals. Involve them and
they'll buck you up when you need encouragement.
10. Set goals in all areas of your life. Have other goals
besides career objectives.
11. Your goals must harmonize. Whenever you detect a
conflict, set priorities that will eliminate the conflict.
12. Review your goals regularly. Remember, long-term goals
can only be achieved if they are the culmination of short-
term goals.
13. Set vivid goals. Define not only what you want but by
when you want it, and concentrate on it for a few moments
every day.
14. Don't chisel your goals in granite. Sometimes you have
to change goals to conform to your growing awareness of
what's really important in your life.
15. Reach out into the future. The idea of goal-setting is
to plan your life rather than taking it as it comes. Begin
by setting 20-year goals. Then 10-year, five-year, 30-month,
12-month, monthly, weekly, and finally goals for tomorrow
and each day for the coming week.
16. Have a set of goals for every day, and review results
each night.
17. Train yourself to crave your goals. Visualize yourself
possessing what you've set your goals for.
18. Set activity goals, not production goals. Activity will
lead to production by itself.
19. Understand luck, and make it work for you. Expect good
things to happen, and they probably will.
20. Start now. Give goal-setting two hours of concentrated
through today. Then set aside 10 minutes a day for the next
21 days to review and revise. After that, two minutes a day
and one hour a week is all it will take to keep you on
track.
Try this system if you want to achieve your goals and within
21 days you'll be well on your way to an immensely greater
and richer future.