Tuesday, 25 November 2025

பேலன்ஸ்

 


போதையில் பேசினாலும் அவன் தெளிவா தான் பேசி இருக்கான் எனக்கு தான் சரியா விளங்க வில்லை!

இரயில்வே ஸ்டேஷனில் நண்பனுக்காக காத்‌திருந்தேன்,

பச்ச லுங்கியோட ஒரு குடிமகன் வந்தார்.

கு.ம : சார்…! கொஞ்சம் போன் தரீங்களா வீட்டுக்கு பேசணும்.

நான் : வீட்டுக்கு தான் பேசுறீங்களான்னு எப்புடி தெரியும் ?

கு.ம : ஸ்பீக்கர் போட்டு குடுங்க சார்....

(தெளிவாத்தான் இருக்கார். நம்பர் போட்டு ஸ்பீக்கர் போட்டு குடுத்தேன்)

கு.ம : ஹலோ...!

அங்குட்டு : அலோ...! என்னங்க நீங்கதானா?

கு.ம : நாந்தான் சொல்லு.

அங்குட்டு : கெளம்பிட்டீங்களா ?

கு.ம : இல்லடி... நாளைக்கு வாரேன்.

அங்குட்டு : புள்ள நோட்டு கேட்டுச்சே?

கு.ம : நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாரேன். பேலன்சு இல்ல அப்புறம் பேசுறேன்.

நான் (குறுக்க) : பேலன்ஸ்ல்லாம் இருக்கு பேசுங்க.

அங்குட்டு : இருங்க வச்சுறாதீக…! புள்ள பேசனுமாம்.

கு.ம : டி __________ நாந்தான் பேலன்ஸ் இல்லன்னு சொல்றேன்ல.

நான் (குறுக்க மறுபடியும்) : பேலன்ஸ்ல்லாம் இருக்கு பேசுங்கண்ணே.

புள்ள : நைனா, கோடு போட்ட நோட்டு வாங்கிகினியா?

கு.ம : ஏ லூசு...! பேலன்சு இல்ல காலைல பேசுறேன், சார் போன பிடி சார்.

நான் : பரவால்ல பேசுங்கன்னு சொல்றதுக்குள்ள பயபுள்ள ப்ளாட்பாரத்துல உழுந்துகிடக்கு.

அவன் தெளிவாத்தான் பேசிருக்கான், நாந்தான் குழம்பிட்டேன். பேலன்ஸ் இல்லைங்குறது அவனுக்கு(போதையில)..😜🤣🤣

No comments:

Post a Comment