Saturday 4 August 2012

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 6


  1. இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனிஇந்த 
    உலகுக் கெல்லாம்
    உய்வண்ணம் அன்றி மற்றோர் 
    துயர்வண்ணம் உறுவது உண்டோ
    மைவண்ணத்து அரக்கி போரில் 
    மழைவண்ணத்து அண்ண லேஉன்
    கைவண்ணம் அங்குக் கண்டேன்
    கால்வண்ணம் இங்குக் கண்டேன்!

    - Kamba Raamaayanam


    ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் 
    பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னம் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னம் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? கார் வண்ண கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா? 
    ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா? மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா? நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா? பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் பெண்: பருவம் வந்த காலம் தொட்டு பழகும் கண்கள் பார்வை கெட்டு என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

    ஆண்: நாள் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா? பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

    ஆண்:பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

No comments:

Post a Comment