Thursday 16 August 2012

மூளைக்கு வேலை - 8


ஒருவர் கையில் கொஞ்சம் பூக்களுடன் கோவிலுக்கு செல்கிறார்.

கோவில் வாசலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை போட்டால் தான் வாசல் கதவு திறக்கும்.

மூன்று வாசல்களை கடந்து தான் தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

தெப்ப குளத்தில் அவர் எத்தனை பூக்களை போடுகிறாரோ அது இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கும்.

மூன்று முறை தான் குளத்தை உபயோகிக்கமுடியும்.

முதலில் குளத்தில் அவர் கொண்டு வந்த பூக்களை போடுகிறார்.அது இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை முதல் வாசலில் போடுகிறார்.முதல் வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் மீதமுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை இரண்டாவது வாசலில் போடுகிறார்.இரண்டாவது வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் எஞ்சியுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கிறது.

கிடைத்த அனைத்து பூக்களையும் மூன்றாவது வாசலில் போடுகிறார்.கதவு திறக்கிறது.தரிசித்து விட்டு வெருங்கையுடன் வீடு திரும்புகிறார்.

கேள்வி இது தான்.....

1)அவர் எத்தனை பூக்கள் வரும்போது கையோடு எடுத்து வந்தார்?

2)ஒவ்வொரு வாசலிலும் கதவு திறக்க எத்தனை பூக்களை போட்டார்?

பி.கு : மூன்று வாசல்களையும் திறக்க ஒரே எண்ணிக்கையிலான பூக்கள் தான் போட பட வேண்டும்.

No comments:

Post a Comment