Tuesday 15 March 2022

விளக்குகள்

 


உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.



முற்காலத்தில் உலோகங்களால் விளக்குகள் செய்ய உளிகளும், சுத்தியல்களும் கிடையாது என்பதால் மக்கள் மண் விளக்கையே பயன்படுத்தியுள்ளனர். மருதநில மக்கள் மண் விளக்கில் கலை அம்சத்தைப் புகுத்தியுள்ளனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
மக்கள் உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் கல் விளக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பிறகு பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட, கலை அம்சம் நிறைந்த விளக்குகள் வர ஆரம்பித்து விட்டன. உதாரணமாக திருவிளக்கில் குத்துவிளக்கு, தூக்கு விளக்கு, நந்தா விளக்கு, அன்னப்பட்சி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, சரவிளக்கு, கிளை விளக்கு என ஏராளமான விளக்குகள் உள்ளன.


எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. 

1. அணுக்கன் திருநுந்தா விளக்கு

2. அணுக்க விளக்கு

3. அனந்தலை விளக்கு

4. ஏறும்பு காணித் திருக்குத்து விளக்கு

5. குத்து விளக்கு, ஐச்சு நிலை குத்து விளக்கு

6. சந்தியா தீபம்

7. தரா நிலை விளக்கு

8. தாழி விளக்கு - (கலை)

9. துஞ்சா விளக்கு, துாங்கு விளக்கு, நந்தா விளக்கு, நுந்தா விளக்கு,

10. நிலை விளக்கு

11. பாதத்தில் எழுத்து வெட்டித் தரா விளக்கு

12. பாவை விளக்கு




















13. பிடி விளக்கு

14. மேதினி விளக்கு

15. சிங்கம் வைச்ச விளக்கு

16. சோதி விளக்கு

17. தாழி விளக்கு

No comments:

Post a Comment