Saturday 26 March 2022

கிராமீய சேவைத் திட்டம் Village Service Project

பல நண்பர்கள் கிராமீய சேவைத் திட்டத்தைப் பற்றி விரிவாக தெரிவிக்க சொல்லியிருந்தால் இந்த பதிவு : 

நமது தேசத் தந்தை மஹாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் ஆன்மா கிராமங்களிலே இருக்கின்றது என்கிறார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்குமுன் அவர் இந்தியா முழுதும் பயணம் செய்தார். அவர் கிராமம்தோறும் ஆசிரமங்கள் அமைத்து கிராம மக்களுக்கு உதவ பெரிதும் விரும்பினார். அவரால் இரண்டே இரண்டு ஆசிரமங்கள்தான் உருவாக்கப்பட்டன. ஒன்று சபர்மதி மற்றது வார்தா. இந்திய விடுதலைக்காக முழுதும் தன்னை ஒப்படைத்ததால் அவர் கனவு இரண்டே இரண்டு கிராமங்களில் மாத்திரம்தான் செயல்படுத்தப்பட்டது.

மகரிஷி அவர்கள் தனி மனித அமைதிதான் உலக அமைதிக்கு வழிகோலும் என்ற முடிவில் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றவகையில் மனவளக்கலை பயிற்சிகளை நெறிப்படுத்தி அமைத்தார்கள். கிராம மக்களுக்கு இந்த பயிற்சிகள் சென்றடையவேண்டும் என்ற அவரது இலக்கு கடந்த 2012ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று  235 கிராமங்களில் பயிற்சிகள் தரப்பட்டு இந்த கிராமங்கள் அமைதியான மற்றும் ஆரோக்கியமான கிராமங்களாகத் திகழ்கின்றன. 

இத்திட்டம் துவக்கப்பட்டபோது ஞானவயலில் பதிவிட்டதை பார்க்க இங்கே சொடுக்கவும்

இந்தத் திட்டத்தை மிக சிறப்பாக வடிவமைத்து இதற்கென ஓர் இயக்குநரகத்தையும் அமைத்துள்ளவர் WCSC  தலைவர் பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் அவர்கள். 

தற்போது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து பயிற்சிகள் தர பல லட்சங்கள் செலவாகின்றது. இப்பயிற்சிகள் தனது கிராமத்திற்கு தரப்படவேண்டும் என விரும்பும் அன்பர் ரூ மூன்று  லட்சம் நன்கொடை தரவேண்டும். பயிற்சிகள் தருவதற்கென ஒரு ஆண் ஆசிரியர் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் இயக்குநராகத்தால் நியமிக்கப்பட்டு அந்த கிராமத்திலேயே ஐந்து மாதங்கள் தங்கியிருந்து மக்களுக்கு பயிற்சிகள் தருவர். கிராமத்திற்கு அருகில் உள்ள மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்ளும்.

கிராமிய சேவைத்திட்டத்தின் இலக்கு

சுற்றுப்புற சுகாதாரம்

நோயற்ற வாழ்வு

முதியோரை பாதுகாத்தல்

குடும்ப அமைதி

சமுதாய விழிப்புணர்வு

கல்வியில் மேன்மை

மனிதநேயம்

மத நல்லிணக்கம்

அமைதியான கிராமம்


No comments:

Post a Comment