Sunday 13 March 2022

பழமொழிகள்

 இந்த பதிவில் "பழ"மொழிகள் மாத்திரம் அல்ல - காய்மொழி, மரமொழிகளும் இடம் பெற்றுள்ளன!




காய்த்த மரம்தான் கல்லடி படும்

கொடிக்குக் காய் பாரமா?

சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்

சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?

அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?

அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.

அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.

அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

கனியிருக்க காயைத் தின்பரோ?

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு

அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து

எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

யானை வாயில் போன கரும்பைப் போல

No comments:

Post a Comment