Friday 11 March 2022

பெண்கள் எத்தனை வகை?

 


பெண்கள் எத்தனை வகை?

பெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி எட்டு வகையாகவும் தமிழர்கள் வயதின் அடிப்படையில் ஏழு வகையாகவும், ஜப்பானியர்கள் ஒன்பது வகையாகவும், ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் ஏழு வகையாகவும் பிரித்தனர்.

பத்மினி, சங்கினி,ஹஸ்தினி, சித்ரினி

வடமொழி நூலர்கள் குணத்தின் அடிப்படையில் பெண்களை நாலு வகையாகப் பிரித்தனர். அவர்கள் பத்மினி, சங்கினி, ஹஸ்தினி, சித்ரினி எனப்படுவர்.

பத்மினி பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்) சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும் தேவர்களையும் வசப்படுத்துவர்.

சங்கினி வகைப் பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறு சுறுப்பானவர்கள். சங்கு வடிவத்தில் சில உடல் அம்சங்கள் ஒல்லியாக இருக்கும். சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். அதிக சக்தி உடைய இவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோர் கார்கி, வைதேகி, சுரவந்தியா ஆவர்.

ஹஸ்தினி வகைப் பெண்கள் பார்பதற்கு இனியவர்கள், ஆனால் பருமனானவர்கள். பின் தூங்கி பின் எழும் பத்தினிகள். கேளிக்கை விரும்பிகள். நீங்கள் முடிவு எடுத்தால் கோபிப்பார்கள். தானாகவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கேளிக்கையே வாழ்க்கையின் குறிக்கோள். பிரபுக்கள் வம்சம்.

சித்ரினி மிக மெல்லிய தேகம் உடையோர். மூங்கில் குச்சியோ எனலாம். அலங்காரத்திலும் கலைகளிலும் ஆர்வம் அதிகம். அலமாரி முழுதும் ஆயிரம் உடைகளைப் பார்க்கலாம். படுக்கப் போகும் போதும் படுத்து எழுந்திருக்கும் போதும் அலங்காரத்துடன் வருவர். அலங்காரி, சிங்காரி ஒய்யாரி-பேஷன் பேர்வழிகள்.

தமிழர்கள் செய்த 7 வகை

தமிழர்கள் 40 வயதுக்குக் குறைவான பெண்களை மட்டும் வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. பேதை (5—7), பெதும்பை (8—11), மங்கை (12—13), மடந்தை (14—19), அரிவை (20—25), தெரிவை (25—31), பேரிளம் பெண் (32 முதல் 40 வயது).

இது தவிர சம்ஸ்கிருத நிகண்டு அமரகோஷம், தமிழ் நிகண்டு பிங்கலந்தை போன்றவற்றில் பல வடமொழிப்ப் பெயர்கள் உள்ளன. வாலை, தருணை, ப்ரவுடை, விருத்தை என்பன அந்தப் பிரிவாகும். இவைகளும் வயதின் அடிப்படையில் அமைந்தனவே.

காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலியல் ரீதியில் ஆண்களையும் பெண்களையும் பலவகைகளாகப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது. நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோடு இவ்விஷயங்களை அனுகினர் என்பதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

பெண்ணின் குணங்கள்

தாயின் கருணை, அடியாள் போல தொண்டு,பூமாதேவி போல பொறுமை, படுக்கை அறையில் மகிழ்விக்கும் பெண், குடும்ப நிர்வாகத்தில் மந்திரி போல அற்புத மூளை—அத்தனையும் வாய்கப் பெற்றவள் தாய். இதோ நீதி வெண்பா பாடல்:

அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப்
பொன்னின் அழகும் புவிப் பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண்

From a  post from facebook

No comments:

Post a Comment