Wednesday 7 September 2022

இரத்த சுகர்

உடலில் கணையம் என்கிற ஒரு சுரப்பி வயிற்றின் பின் பாகம் இருக்கிறது. இது ஜீரணத்துக்கு தேவையான ஒரு என்சைமையும்( Enzyme ), இரத்தத்திற்கு வரும் இன்சுலினையும் ( Insulin ) சுரக்கிறது. 

உண்ணும் உணவானது உடலுள் பல இரசாயன மாற்றங்களை அடைந்து உடலை இயக்கும் சக்திக்கும், உடற் கட்டுக்கும்  உடல்  பராமரிப்புக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஆதாரமாய் மாறுகிறது. இதை வளர்சிதைமாற்றம் (Metabolism) என்கிறார்கள். இந்த செயல்  எல்லோருக்கும் ஒரே மாசீனி திரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அளவாய் மாறி இருக்கிறது. உண்ணும் உணவின் ஒரு பகுதி குளுக்கோசாக மாறுகிறது. குளுக்கோசானது சுகர் வடிவத்தில் இரத்தத்தில் காணப்படுகிறது. உடலுள் குளுக்கோஸ் எரிபொருளாக இருக்கிறது. நாம்  உண்ணும் சீனி, அரிசி, கோதுமை, உருளைகிழங்கு, பழங்கள், இனிப்புகள்  போன்றவை உடலில் குளுக்கோஸாக மாறுகிறது. 

இரத்தத்தில் இந்த குளுக்கோசை, கணையம் சுரக்கும் இன்சுலினானது சுமந்து கொண்டு திசுக்களைப் போய் அடைகிறது. கணையமானது போதுமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டும். போதுமான அளவு இன்சுலினை கணையத்தால்  சுரக்க முடியாத நிலை வருவதை டயாபெடீஸ் (Diabetes)  என்கிறார்கள். இன்சுலின் சுரக்காததால் திசுக்கள் குளுகோஸ் கிடைக்காமல் சோர்வடைகின்றன. இரத்தத்தில் குளுக்கோஸ் சேர்ந்து விடுகிறது. இதனால் கண், சிறுநீரகம், கால், நரம்பு மண்டலம் போன்றவை  பாதிப்படைகிறது.

கணையத்தில் இன்சுலின் சுரப்பது நின்று விடுமானால் அல்லது மிகக் குறைவாக இருக்குமானால் அதை டைப்-1 (Type-1) டயாபெட்டீஸ் என்றும், கணையம் ஓரளவு சுரப்பதை டைப்-2 (Type-2) டயாபெட்டீஸ் என்றும் கூறுகிறார்கள். டைப்-1 க்கு இன்சுலினை ஊசி மூலம் உடலில் ஏற்றுகிறார்கள்.  டைப் -2 க்கு மாத்திரை சாப்பிட ச்சொல்லுகிறார்கள்.

இரத்தத்தில் சுகர் இருப்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்துக்  கொள்ளலாம். பொதுவாக, காலை உணவுக்கு முன் இரத்தம் மற்றும் சிறுநீரிலும், காலை உணவு முடிந்து 2 மணி நேரத்தில் திரும்பவும் இரத்தத்திலும், சிறுநீரிலும் சுகர் பரிசோதிக்கப்படுகிறது.

காலை உணவுக்கு முன் இரத்தத்தில்     70----110  க்குள்  ஆரோக்கியமானது.
காலை உணவுக்கு பின் இரத்தத்தில்       70----140  க்குள் ஆரோக்கியமானது.

எப்பொழுது பார்த்தாலும்( Random )          70--- 140  க்குள்  ஆரோக்கியமானது.

துல்லியமாக பார்க்க  A1C TEST          6.5%----7.0%  க்குள்  ஆரோக்கியமானது.

சிறு நீரில் சுகரை கலர் மாற்றத்தை வைத்து நிர்ணயிக்கிறார்கள். இரத்த பரிசோதனையின் முடிவின்படியே சிகிச்சை தருகிறார்கள்.

A1C என்கிற இரத்த பரிசோதனை, டயாபெட்டீஸ் எந்த அளவிற்கு உடலில் கட்டுப்பாடாக இருக்கிறது என்பதை நமக்கும், மருத்துவருக்கும் தெரியப்படுத்துகிறது. இந்த பரிசோதனை இரத்த சிகப்பு அணுக்களில் எவ்வளவு சுகர் படிந்திருக்கிறது என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். A1C   யின் அளவு 6,5% முதல் 7% வரைக்குள்  இருப்பது ஆரோக்கியமானது. இச்சோதனை மிகத் துல்லியமானது. இச்சோதனையை 6 மாதத்துக்கு ஒரு முறை செய்து உடற்பயிற்சி, மாத்திரை போன்றவற்றின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

எந்த அறிகுறியும் இல்லாமல், நீண்ட நாள் கண்டுபிடிக்கப்படாமல், சிலரது உடலில் அமைதியாக  டயாபெட்டீஸ்  இருக்கிறது

இனிப்பு வகை உணவுகள், குளிர்பானங்கள், பாட்டில் பழரசங்கள் உடல் எடை அதிகமாக காரணமாகும்.  அதிக உடல் எடை  உடலில் இன்சுலின் குறைவதற்கு ஒரு காரணமாகும். எல்லாச்சத்தும், எல்லோருக்கும் தேவை.
ருசியுள்ள உணவெல்லாம் ஆரோக்கியமான உணவல்ல. தோல் அல்லது தவிடுடன் கூடிய உணவுகளை தேர்ந்தெடுங்கள். காய், கீரை, மீன், நட்ஸ், பயிறு  வகை உணவுகள் நல்லது.

கார்போஹைட்ரேட் வகை உணவுகளுக்குத்தான் இன்சுலின் தேவை. புரோட்டீன் மற்றும் கொழுப்பு வகை உணவுகளுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை நினைவில் கொண்டு நாம் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் டயாபெட்டீஸ் வராமல், அல்லது வந்தபின் சமாளிக்கும் வழியாக பார்த்துக்கொள்ளலாம். கெட்டகொழுப்பு,  நல்ல கொழுப்பு வகை உணவு களையும் நினைவிற்கொள்ள வேண்டும்.


சுகர் வந்தபின், தவறாமல் மருத்துவரிடம்  பரிசோதனை, உணவுப்பழக்கம், மாத்திரை, உடற்பயிற்சி, பலவீனம் பற்றி ஆலோசித்துக்கொள்ள வேண்டியது கட்டயாமாகும். மருத்துவர் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு ஆலோசனை கூறுவார். டயாபெட்டீஸ்  சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்  கலந்துகொண்டு  புதிய  மற்றும்   பல்வேறு ஆலோசனைகளை பெறலாம்.


இரத்த சுகர் வராமல் இருப்பதற்குரிய கட்டுப்பாடுகள்.

வெள்ளை அரிசி உணவுகள், மைதா உணவுகள், சீனி உணவுகள், இவைகளை எளிமையான கார்போஹைட்ரேட்உணவுகள் (Simple Carbohydrate ) என்றும்,  தோல் அல்லது தவிடுடன் கூடிய தானியங்களை, கனிகளை, அவற்றிலுள்ள  கார்போஹைட்ரேட்டை  கடின கார்போஹைட்ரேட் ( Complex Carbohydrate  ) என்றும்  கூறுகிறார்கள்.

தோலுடன் கூடிய உணவுகளில் நார்ச்சத்து இருப்பதினால் ஜீரணம் மெதுவாகவே நடக்கும். அதனால் அவற்றிலிருந்து  சுகரானது மிகவும் மெதுவாக இரத்தத்திற்கு வருகிறது. இதனால் இன்சுலின் தேவையும் குறைந்த அளவு மெதுவாகவே தேவைப்படுகிறது.

எண்ணெய்யில்  செய்த உணவுகளை மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat Food) என்றும் கூறுகிறார்கள். இது திசுக்கள் சுகரை எடுத்துக்கொள்வதை மந்தப்படுத்துகிறது.

எளிமையான கார்போஹைட்ரேட் உணவு களுக்கு நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது. அவை அனைத்தையும் திசுக்கள் எரிப்பதற்கு வேர்வை சிந்தும் உடலுழைப்பும் தேவைப்படுகிறது.

மாறிய கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் அதனால் உருவாகும் செல்களால்  இரத்தத்திலுள்ள சுகர் மற்றும்  இன்சுலினை குறைந்த அளவே பயன் படுத்த முடிகிறது. இரத்தத்தில் சுகர் அதிகரிக்க மாறிய கொழுப்பு வகை உணவுகளும்(Trans Fat Food) ஒரு முக்கிய காரணமாகும்.

தேவையான அளவு இன்சுலின் சுரந்து உடல் உழைப்பு இல்லாத  போது இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சுகரும், இன்சுலினும் கொழுப்பாக மாறி தோலின் அடியில் உறைந்து உடல் எடையை  அதிகரிக்கிறது. அதிக உடல் எடை பலவித ஆரோக்கிய குறைவிற்கு காரணமாகிறது.

புரோட்டீன் வகை உணவு களை  செல்கள்  பயன் படுத்து வதற்கு இன்சுலின் தேவையில்லை. எனவே தோலுடன் கூடிய கடலை, பயறு, மற்றும் பருப்பு, காய், கீரை, நட்ஸ், சீட்ஸ்,  போன்ற வைகளை மூன்று வேளை  உணவிலும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அரிசி, மைதா மாவு உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.

சீனி மற்றும் மாறிய கொழுப்பு உணவுகள் மெல்லக்கொல்லும் விஷமாகும். அவை  மனிதன் கண்டு பிடித்த இயந்திரங்களினால் தயாரிக்கப்பட்டு பல முக்கிமான சத்துக்கள் நீக்கப்பட்டு  பயன் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் காலையில்  திறந்த வெளியில் முப்பது நிமிடம் தடையின்றி ஏதாவது ஒரு உடற்பயிற்சிசெய்வது இரத்த சுகருக்கும், கொலஸ் டிரா லுக்கும், இரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல் எடைக்கும் மிகவும் நல்லது.

யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் டயாபெட்டீஸ் வரலாம் என்பதை நினைவில் கொண்டு நல்ல உணவுகளிலும், உடற்பயிற்சியிலும் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நோய்களை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதில் உறுதி கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment