Wednesday 14 September 2022

நமது உடல் பற்றி சில விஷயங்கள் ....1

*கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.

*நமது மூக்கினால் 50,000 வகையான வாசனைகளை நினைவில் கொள்ள முடியும்.

*ஏறத்தாழ ஓர் முதிர்ச்சியான மனிதனின் உடல் 7,000,000,000,000,000,000,000,000,000 அணுக்களால் உருவாகியிருக்கிறதாம்

*குழந்தையின் உடலில், வளர்ந்த நபர்களை விட 60 எலும்புகள் அதிகமாக இருக்கும். வளர, வளர சில எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக இனனைந்து விடுகிறது.

*ஓர் மனித உடலில் இருக்கும் இரத்த நாளங்களை இணைத்தால் அது ஒரு லட்சம் மைல் தூரம் இருக்குமாம்.

*ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 23.65 லிட்டர் எச்சிலை சுரக்கிறான். இது ஓர் நீச்சல் குளத்தை நிரப்புவதற்கு போதுமான நீர் அளவு ஆகும்.

*நமது உடலில் இருக்கும் இரும்பின் அளவை கொண்டு, மூன்று இன்ச் நீளமுள்ள ஓர் ஆணியை உருவாக்கலாம்.

*உண்மையில் வியர்வை வாசனை அற்றது. அது உடல் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களோடு இணையும் போது தான் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது.


*ஓர் மனிதனின் உடலில் கடைசி வரை வளர்ந்துக்கொண்டே இருக்கும் உடல் பாகம் மூக்கும், காதும் தான்.

*மனிதர்களின் எலும்பு இரும்பை விட உறுதியானது, வலிமையான

*மனிதனின் கண்கள் 10 மில்லியன் வண்ணங்களை பிரித்து காணும் திறன் கொண்டது.

*ஒருவேளை மனித கண்கள் டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் திறன் 576 மெகா பிக்சல் திறன் கொண்டிருக்கும்.

*மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் ஒட்டுமொத எடை ஏறத்தாழ 1.82 கிலோ வரை இருக்கும்.

*ஓர் நாளுக்கு ஒரு லிட்டர் அளவு வரை சளியை உருவாக்குகிறதாம் மனித உடல்.

*எலும்பின் 31% தண்ணீரின் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 

 *மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 

 *இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. 

*மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 

 *ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 

 *ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 

 *மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 

*சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 



*குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

No comments:

Post a Comment