Saturday 17 September 2022

உப வேதங்கள்

    தலைமுறை தலைமுறையாக வேதகால முனிவர்கள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே நான்கு உபவேதங்களாக அறியப்படுகின்றன. ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. 


அவை :

1.   ஆயுர்வேதம்:  உடலை  நோய்களிலிருந்து  காப்பாற்றி  ஆயுளை  அதிகரிக்கும்  மருத்துவம்.

2.   தனுர்  வேதம் :  தற்காத்துக்  கொள்ளும்  போர்ப்  பயிற்சிகளைக்  கற்றுத்  தருவது.

3.   காந்தர்வ  வேதம் :  மனதிற்கு  இன்பமூட்டும்  இசை,  நடிப்பு,  நடனம்  முதலியவை.

4.   அர்த்த  வேதம் :  பொருள்களைச்  சம்பாதிக்கும்  உபாயங்களைத்  தெரிவிப்பது.

No comments:

Post a Comment