Sunday, 23 March 2025

மிஸ்டர் எக்ஸ் ஜோக்

நம்ம ஆள் ஒருவர் நண்பரை பார்க்கச் சென்றிருந்தார்.. பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது .

நண்பர் சொன்னார் "மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு. அதனாலே தங்கிட்டு காலையில போ".. நம்மவரும் ஒப்புக் கொண்டார் .

சற்று நேரத்தில் நம்ம ஆள் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்... கொஞ்ச நேரத்தில் தெப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார். நண்பர் கேட்டார்.. "எங்கே நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?''

இவர் சொன்னார்...

" எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி. அதான் என் வீட்டுக்குப் போய் ராத்திரிக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்.. ".

நண்பர் சொன்னார் "அறிவு இருக்கா உனக்கு .. சொல்லியிருந்தா ஒரு குடை குடுத்து விட்டிருப்பேன்ல?".

No comments:

Post a Comment