ஏழு ஜென்மம் நீதான் என் கணவராக வர வேண்டும்!
சித்திர குப்தன் பிரம்மா கிட்ட போய்
" பூமியில் உள்ள பெண்கள் எல்லாம் தங்களுக்கு இப்பிரவியில் இருக்கும் அதே கணவனே ஏழு ஜென்மம் கணவனாக வர வேண்டும் என்று வரம் இருக்கிறார்கள்!
சரி அப்படியே ஆக செய்வோம்!
அங்க தான் பிரச்சனை பிரம்மா ! ஆண்கள் எல்லாம் அடுத்த ஏழு ஜென்மம் வேறு வேறு பெண் தான் மனைவியாக வர வேண்டும் என்று தவம் செய்கிறார்கள்!
அதுவும் நியாயம் தான்!
இப்ப என்ன செய்வது பிரம்மா!
சித்திரகுப்தா ! நீ போய் அவர்கள் கிட்ட போய் கண்டிப்பாக அவர்கள் கல்யாணம் செய்த கணவன் ஏழு ஜென்மம் கிடைப்பார்கள் ஆனால் கணவனின் அம்மா தான் மாமியாராக வருவார் இது சரி என்றால் அவர்கள் வரம் ஏற்றுக் கொள்ளப் படும் என்று சொல்லுங்கள்! என்றார்!
பெண்கள் உடனே தவத்தை கலைத்து விட்டு சென்றனர்!
No comments:
Post a Comment