Showing posts with label Family. Show all posts
Showing posts with label Family. Show all posts

Friday, 19 September 2025

நல்ல தாம்பத்யம் என்றால் என்ன.,.




நல்ல தாம்பத்யம் என்றால் என்ன.,.

தாம்பத்தியம் என்னும் அறம்..கணவன் மனைவி இருவரும் இணைந்து சேர்ந்து வாழ்வதற்கான ஒரு காரணம்..வரையறை..

மனதால்..உள்ளத்தால்..இதயத்தால் இணைந்து பின்பு உடலால் இணைவதே அழகான தாம்பத்தியம்..

காதல் இருவரையும் இணைக்கும் பாலமாக/ கருவியாக இருப்பது..

மனதின் மொழியையும்..

உடலின் மொழியையும்..

இருவரும் ஒரு சேர உணர்ந்து..

வாழ்க்கையின் பொன்னான தருணங்களில்..ஒருவர் சூரியனாகவும்…மற்றொருவர் சந்திரனாகவும்..மாறி மாறி பிரகாசித்து இல்லறத்தை நல்லறமாக பேணி பாதுகாத்து..உறவுகள் சூழ..பேரின்பம் பெற்று..ஒருமித்த மனதுடன் வாழும் வாழ்க்கையே சிறந்த தாம்பத்தியம்..

கணவன் மனைவி இன்புற்று வாழ இருவர் மட்டுமே..பிரதானம்..

குழந்தைக்காக வாழ்கிறேன்..

பெற்றோருக்காக பார்க்கிறேன்..

என்று ஒருவருக்கு ஒருவர் தியாகம் செய்யாமல் இருவரும் புனிதமான தாம்பத்தியத்தின் சிறப்பை மேன்மையை உணர்ந்து..செயல் பட வேண்டும்..

////அன்பு நேசம் பாசம் காதல் காமம்..இளமையில் தொடரும்..இந்த காதல் யுத்தங்கள்..இதழ் பிரியா சத்தத்தோடு..முதுமையிலும் அதே விலகாத பிரியத்துடன் தொடர வேண்டும்..தொடர்ந்தால்..////

அதுவே உண்மையான தாம்பத்தியம்..

காதல் செய்யுங்கள் உங்கள் சொந்த மனைவியை..

காதல் செய்யுங்கள் உங்கள் சொந்த கணவரை..

நம் உறவைத் தவிர வேறு சிறந்த பெரிதான உறவு இல்லை என்று எண்ணுங்கள்..

உடல் மற்றும் இல்லை..தூயவுள்ளமும் தேவை என்று உணருங்கள்..

காமம் மற்றும் அல்ல..காதலும் தேவை என்று நினையுங்கள் ..

கூடல் மட்டுமல்ல ஊடலும் தேவை என்று தெளிவு கொள்ளுங்கள்..

தாம்பத்தியம் என்னும் சொல்லைத் தக்க வைக்க ஆயிரம் முயற்சி செய்ய வேண்டும்..அதை அழிக்க ஒரு வார்த்தை போதும் என்ற பலவீனத்தை புரிந்து கொள்ளுங்கள்..இல்லறம் என்னும் நல்லறம் இனிக்கட்டும்..கரும்பாய்..

Saturday, 30 August 2025

கணவன் மனைவி அன்பைப் பெற…

 


க ணவன், மனைவி உறவு கசந்துவிடாமல், அவர்களின் அன்பை பெற, இதை கடைப்பிடியுங்கள்:

1: இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்.

2: எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.

3: ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.

4: ஒருவர், ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும்.

தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.

5: ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள்.

உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள். உணவு, உடை உட்பட.. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும்.

6: ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம்.

அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது.

அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டி பழகினால் அது உரிமையற்ற உறவு.

இதுபோன்ற உறவுகள் உங்களின் துணையிடம் விரிசலை ஏற்படுத்தும்.

எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு.

7: காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனது எப்போதும் குழந்தைதான்.

கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர்கள் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.

8: கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள்.

ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும்.

9: பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள்.

10: ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அவர்களின் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம்.

11:'அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம்' என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும்.

12: ஒரே மனதுடன் விருப்பங்களை நிகழ்த்துங்கள்:

குடும்பம், கனவுகள், எதிர்காலம் குறித்து ஒரே சிந்தனை கொண்டு இருங்கள். அன்பு கொண்ட செயல்களை செய்துகாட்டுங்கள்.

இனிமையும், எளிமையும் நிறைந்த வாழ்வை சிறப்பாக வாழுங்கள்!

வாழ்த்துக்கள்