Sunday 26 June 2022

குரு - சீடன்

 ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான்: "குருவே, நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா?"

" இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம்" என்றார் குரு. உடன் சீடன் கேட்டான்: "கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே?" என்றான்.

" அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம்>"

 மறுபடியும் சீடன் கேட்டான்: " மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?"

" ஒரு குறையும் இல்லை"  என்றார் குரு

 அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்:  "இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே" என்றான்.

குரு கேட்டார்: " கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில்
 போட்டால் உனக்கு வலிக்குமா?"
" வலிக்காது குருவே" என்றான்
 "மேலும் சிறிது நீரை ஊற்றினால்..." குரு கேட்டார்.
 "அதுவும்  வலிக்காது குருவே" என்றான். 
குரு அமைதியாகச் சொன்னார்:
 "இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட
 செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?"
" என்  தலை பிளந்துவிடும் குருவே" என்றான்.
" உன் கேள்விக்கான  விடை கிடைத்து விட்டது " என்றார் குரு

No comments:

Post a Comment