Sunday 25 November 2012

இன்று படித்தது - 14


ஓஷோவின் வெற்றுப்படகு என்ற புத்தகத்திலிருந்து....


சாக்ரடீஸ் மிகவும் ஆழமாக , ஒவ்வொன்றையும் மிகவும் நுண்ணியமாகத் தெரிந்துகொள்வதற்கான கேள்விகளைக் கேட்டு வந்தார் . இதனால் ஏதென்ஸ் நகரிலுள்ள மக்கள் கோபமடைந்தார்கள் . சாக்ரடீஸ் மற்றவர்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் சாக்ரடீஸைக் கொன்றனர். சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில் சீனாவில் சுவாங்தஸ¤ வாழ்ந்து வந்தார் . சாக்ரடீஸ் , சுவாங்தஸ¤ வைச் சந்தித்திருந்தால், இந்த ரகசியத்தைச் சொல்லியிருப்பார் .

" யாரையும் முட்டாளாக்க முயற்சி செய்யாதே , ஏனெனில் முட்டாள்கள் அதை விரும்புவதில்லை ,பைத்தியக் காரனிடம் அவன் பைத்தியம் என்பதை நிரூபிக்காதே , ஏனெனில்எந்தப் பைத்தியமும் அதை விரும்புவதில்லை , கோபமடைவான் , ஆத்திரமடைந்து உன்னைக்கொல்ல வருவான் , நீ அவனை விட உயர்ந்தவன் என்பது நிரூபிக்கப்பட்டால் , அவன் உடனே பழிவாங்கி விடுவான் . நீ முட்டாளாக இருப்பது நல்லது , அப்பொழுது மற்றவர்கள் உன்னைப் பார்த்து சந்தோசம் அடைவர். இந்த நுணுக்கமான வழிமுறை மூலம் நீ மற்றவர்களை மாற்ற முடியும் , பிறகு உனக்கு எதிராக அவர்கள் இருக்க மாட்டார்கள் ."


இதனால் தான் கீழை நாடுகளில் , முக்கியமாக இந்தியா , சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளில் கிரேக்க நாட்டில் சாக்ரடீஸை விஷமிட்டுக் கொன்றது போன்ற அசிங்கமான சமபவங்கள் நிகழவில்லை , இது ஜெருசலேமில் நிகழ்ந்தது - இயேசு சிலுவையில் அறையப்பட்டார் .இது ஈரானில் , எகிப்தில் மற்ற நாடுகளில் நிகழ்ந்தது - அனேக புத்திசாலிகள் கொல்லப்பட்டார்கள். இது மாதிரியான நிகழ்ச்சிகள் இந்தியாவிலோ , சீனாவிலோ ,ஜப்பானிலோ ஏற்படவில்லை . ஏனெனில் இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மக்கள் புத்திசாலியான மனிதனைப் போல் நடந்து கொள்வது பெருந்துன்பங்களை விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள் .









முட்டாளைப் போல , பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள் . இது தான் புத்தி சாலியின் முதல் படியாகும் , அப்பொழுது தான் நீங்கள் அவனைக் கண்டு பயப்படமாட்டீர்கள் . நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பீர்கள் .

No comments:

Post a Comment