Friday 30 November 2012

மேட்டூர் அணை


 மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் மற்றும் சர்ச் கோபுரம், எட்டு ஆண்டுகளுக்கு பின், முழுமையாக நீருக்கு வெளியே காட்சியளிக்கின்றன.


மேட்டூர் அணை கட்டும் முன், நீர்பரப்பு பகுதியில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. வழிபாட்டுக்காக கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில், அதன் அருகில் நந்தி சிலை, அங்கிருந்து, 1 கி.மீ., தொலைவில் சர்ச் ஆகியவை கட்டப்பட்டிருந்தன.அணை கட்டி நீர் தேக்குவதற்காக, கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் அப்படியே இருந்தன.மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம், 82 அடியாக குறையும் போது, சர்ச் இரட்டை கோபுர முகப்பும்; 69 அடியாக குறையும் போது, நந்தி சிலை தலையும் வெளியில் தெரியும்.

 2004ம் ஆண்டு, நீர்மட்டம், 29 அடியாக குறைந்ததால், நந்தி சிலை, சர்ச் கோபுரம் முழுமையாக தெரிந்தது.எட்டு ஆண்டுக்கு பின், தற்போது, மேட்டூர் அணை நீர் மட்டம், 47 அடியாக குறைந்த நிலையில், அணை நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வர் கோவில் கோபுர முகப்பு, சர்ச் கோபுரம் ஆகியவை, நீருக்கு வெளியே, முழுமையாக தெரிகின்றன. 

சேலம் மாவட்டம் உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும், சுற்றுலா பயணிகள், ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

**************************


காவிரி நதி நீர் பகிர்வு குறித்து, கர்நாடக முதல்வருடன் பேச்சு நடத்தி, சென்னை திரும்பிய, முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்கு, 65 நாள்தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு, 30 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட வேண்டும் என, கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டோம். 

ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடத் தர முடியாது என, கர்நாடகம் தெரிவித்து விட்டது.எனவே, தமிழகத்துக்கு காவிரி நீரை அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டை, இன்றே அணுகுகிறோம். 


இதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்

நன்றி - தினமலர் 

No comments:

Post a Comment