Wednesday 30 July 2014

பகவத்கீதை.....13


மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்;

மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
மறுபடிப் பிறந்திருக்கும்;

மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று;
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
வெந்து தான் தீரும் ஓர் நாள்.


என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
எனதென்றும் அறிந்து கொண்டாய்;

கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே, மக்களும் நானே,
மரம் செடி கொடியும் நானே;
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;
துணிந்து நில் தர்மம் வாழ.



புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.



கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
கண்ணனே கொலை செய்கின்றான்.

காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க!



பரித்ராணாய சாதூனாம்,
விநாசாய சதுஷ்க்ருதாம்;

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய, 
சம்பவாமி யுகே யுகே.




No comments:

Post a Comment