Sunday 20 July 2014

குரு - சீடன்....2

ஒரு ஆசிரமம் ,  அங்கே ஒரு குரு இருந்தார் அவரை தேடி ஒருத்தன் வந்தான் ," எனக்கு கற்று கொடுங்கள் ,அதாவது போதியுங்கள் " என்றான் .

" சரி ... இங்கேயே இரு .. கற்றுக் கொடுக்கிறேன் " என்றார் . அவன் அங்கேயே இருந்தான் . ஒரு மணி நேரம் ஆச்சு ... ரெண்டு மணி நேரம் ஆச்சு .. இப்படி நேரம் ஓடிகிட்டே இருக்கு ...

பல பேர் தொடர்ந்து அங்கே வந்துக்கிட்டுருக்காங்க , அப்படி வருகிறவர்கள் எல்லார்கிட்டயும் ஏதோ பேசிக்கிட்டே இருக்கார் .
வருகிறவர்கள் எல்லோரும் தங்கள் பிரச்சனைகளை சொல்கிறார்கள் . அதுக்கு தகுந்த தீர்வை இவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார் .

இவன் பாட்டுக்கு உட்கார்ந்து  இருக்கான்

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்தான் .

ஒரு கட்டத்துல திடீர்ன்னு எழுந்துரிச்சு நின்னான் .

" கொஞ்சம் என்னையும் பாருங்க ... நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கேன் . எனக்கு கற்று கொடுக்கறேன்னு சொன்னீங்களே ... எதையுமே கற்றுக் கொடுக்கலே ...! அப்படீன்னான்

குரு சிரிச்சிகிட்டே சொன்னார் :

" தம்பி ! நான் இவ்வளவு நேரமா வேற என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்னு நினைக்கிற ? நிறைய பேர் வந்தாங்க ... என்கிட்ட கேள்விகள் கேட்டாங்க ...அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன் . அதிலே உனக்கும் போதனை இருக்கு .."

இவன் குழம்பி போனான் .

அவர் சொன்னார் :

" போதனை நான் சொன்ன பதிலில் இல்லை . நான் பதில் சொன்ன விதத்தில் தான் இருந்தது . யார் யாருக்கு எப்படிப் பதில் சொன்னேன் என்பதை நீ கவனித்திருக்க வேண்டும் . சில பேர் என்கிட்டே வந்தாங்க , எதுவுமே கேட்கல .. மௌனமாக என் பக்கத்துல உக்கார்ந்தாங்க ..நானும் மௌனமாக இருந்தேன் .... அதில் உனக்கும் போதனை இருக்கிறது . ஐந்து மணி நேரமாக உனக்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தேன் .

நீ கற்று கொள்ள தவறிவிட்டாயே " அப்படின்னாராம்


குரு என்பவர் எதையும் போதிப்பதில்லை ஏன்னென்றால் அவரே

 ( குருவே ) ஒரு போதனை தான் .

வழி காட்டுகிறவர்கள் குருவாக முடியாது . வாழ்ந்து காட்டுகிறவர்களே குருவாக முடியும் !




எனக்கு தெரிந்த ஆசிரமம் , ஒரு நாள் போனேன் ...

உள்ளே  குரு முன்னாடி சீடர் பவ்வயமா கை கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார் ..

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமாக விவாதம் செய்துகிட்டு இருந்தாங்க

சீடர் கேக்கறார் , குரு அதை கண்டிப்புடன் மறுக்கிறார்

மறுபடியும்  சீடர் கேக்கறார் ,

 குரு " இல்ல.... இல்ல .... அது சரியில்ல ...அப்படி செய்ய கூடாது .... நல்லா இல்லை ! அப்படின்னார்

சீடர் வெளியே வரும் பொது " ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது " அப்படீன்னு புலம்பிகிட்டே வெளியே வந்தார்

நான் அவரை வழிமறிச்சி  " என்னங்க உங்க குரு அவர் கருத்துல ரொம்ப பிடிவாதமா இருக்கிறாரா ?

"ஆமாங்க "...ன்னார்

" அப்படி... நீங்க ... என்ன கேட்டுடீங்க அவர் கிட்ட ? ......ன்னேன்

" அப்படி ஒண்ணும்  பெருசா கேட்டுடலீங்க ....

இத்தனை வருஷமா நீ குருவா இருந்தியே ... இனிமே நான் உனக்கு குருவா இருக்கிறேனே ! ன்னு கேட்டேன் ... அவ்வளவுதாங்க !... அப்படின்னார்

                                                                                                                                                                                                                       

                                                                                 தென் கச்சி கோ சுவாமிநாதன்

No comments:

Post a Comment