Thursday 24 July 2014

நிறைவு ....3


 நிறை உணர்வு 


உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும் 
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து 
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன் 
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன் 
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை 
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும் 
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும் 
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.




---வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment