Thursday 10 November 2022

அரசர்கள் கையாண்ட நான்கு உபாயங்கள்--

 அரசர்கள்  கையாண்ட நான்கு உபாயங்கள்

சாம, தான, பேத, தண்டம் - 


1)சாம-- நல்ல வார்த்தைகளால் இன்முகத்துடன் வரவேற்றல், நல்ல உபசரணை செய்து தன் வயப்படுத்துதல்,

2) தான- -ஐந்து வகைகள் --ப்ரீதிதான, த்ரவிய தான, ஸ்வயம்க்ராஹ, தேய, ப்ரதிமோஹ;; பல தரப்பட்ட மக்களை கவர் இந்த தான முறைகள் உதவும்.

3) பேத;; நண்பர்களை சூழ்ச்சி செய்து பிரித்தல், இரு தரப்புகளுக்கிடையே பகைமையை உருவாக்கிப் பிரித்தல். சந்தேகங்களை உருவாக்கிப் பிரித்தல், நல்ல நண்பர்களைப் பிரித்துத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுதல்;

4) தண்ட--கொல்லுதல், செல்வத்தை அழித்தல், சித்ரவதை செய்து உடம்பின் உறுப்புகளை வெட்டுதல்;; கெட்ட நண்பர்கள், மந்திரிகள், சூழ்ச்சி செய்யும் அரசர்கள், விரோதிகளை இம்முறையில் அழிக்கவேண்டும்.

இதைத் தவிர,சில மாயா உபாயங்களும் உண்டு. மந்திர தந்திர சக்தியால் உருமாறுதல், மழை, நெருப்பு, மேகமூட்டம், இருட்டு உண்டாக்குதல் செய்து எதிரிகளை பயமுறுத்துதல்என்பன . இந்த இந்திர ஜாலங்களை சூரபதுமன் போன்ற அசுரர்கள் அறிவர்.

No comments:

Post a Comment