Monday 21 November 2022

கொசு

 


  • பெண் கொசுக்கள்தான் கடிக்கின்றன, ஆண் கொசுக்கள் சுத்த சைவம் , அவை பூவிலிருந்து தேனை மட்டும் குடிக்கின்றன ..பெண் கொசுக்களுக்குதான் முட்டை இடுவதற்காக இரத்தம் அருந்த வேண்டியிருக்கின்றது.,
  • கன்னிகொசுக்களை விட இனபெருக்கதிற்கு தயாராகும் பெண் கொசுக்களே அதிகம் மனிதனை கடிக்கின்றது .
  • உலகில் 2700  வகையான கொசு இனங்கள் உள்ளன. 
  • கொசு , காற்றில் அப்படியே அசையாமல் நிற்கவும், வட்டம் இடவும், தலைகீழாக பறக்கவும் , பக்கவாட்டில் மற்றும் பின்புறமாகவும் கூட பறக்கும் திறன் பெற்றாவை. 
  • சில கொசுக்கள் மழை பெய்துகொண்டிருக்கும்போது கூட, சிறு நீர்த்துளிகளில் சிக்காமல் வளைந்து பறந்து உடல் நனையாமல் பார்த்துகொள்ளகூடியவைகள்.    
  • நொடிக்கு 250 முதல் 600 தடவைகள் வரை கொசுவின் சிறகுகள் சிறகடித்துகொள்வதால்  அதன் சப்தம் நமக்கு ரீங்காரமாய் கேட்கிறது.  
  • கொசு நம்மை கடிக்கும் முன் நமது  உடலின் தட்ப வெப்ப நிலை, ரத்த ஓட்டம் ஆகியவற்றை அறிந்துகொண்டு சரியான இடத்தில அமர்ந்து ரத்தம் குடிக்கின்றது...
  • கொசுவின் வாயில் இரண்டு ரம்பங்கள் இருக்கின்றன . இவற்றினால் தொலை மென்மையாக துளைத்து ஊசியை உள்ளே நுழைத்து ரத்தத்தை உறிஞ்ச முடிகிறது .இந்த கருவிகள் , யானைத்தோல் போன்ற கழிவு தோள்களிலும் துளை போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாகும்.
  • இவைகள்  நம் உடலை குத்தும்போது லாடிக் அமிலத்தை வெளியேற்றுகின்றன , இந்த திரவம் நம் தொலை லேசாக மரத்து விடுவதால், சட்டென்று நமக்கு வலி உறைப்பதில்லை . 
  • வலி உரத்து கொசுவை நாம் அடிக்க கை ஓங்கும்போது நம் உடலில் ஏற்படும் அதிர்வை அவைகள் உணர்ந்து நாம் அடிக்கும் முன் சட்டென்று பறந்து போய்விடுகின்றது.
  • கொசுவுன் கண்கள் நூற்றுகணக்கான சிறு லென்சுகளால் ஆனவை. இருந்தாலும் சில அங்குலத்திற்கு மேல் அதனால் பார்க்க முடியாது.
  • ஒரு சொட்டு ரத்தத்தை கொண்டு 40 முதல் 50  கொசுக்கள் தங்கள் வயிற்ரை நிரப்பிக்கொள்ளும் , இதை உறிஞ்ச ஒரு நிமிடம் கூட ஆகாது.   

அது ஏன் கொசு ராத்திரி மட்டும் கடிக்குது தெரியுமா?

பகலை விட ராத்திரியில் கொசுக்கள் அதிகம் கடிக்க, அல்ட்ரா வயலட் அதாவது புற ஊதாக் கதிர்கள்தான் காரணமாம். பகலை விட இரவு, சூரிய உதயத்திற்கு முன்பு மற்றும் அந்தி சாயும் நேரங்களில் இந்த புற ஊதாக்கதிர் வீச்சு அதிகம் இருக்கும். அவைதான் கொசுக்கள் படு ஆக்டிவாக இருக்கும் நேரமும் ஆகுமாம்.

கொசுக்களுக்கு ரொம்பப் பிடித்த நேரம் இந்த அதிகாலையும், அந்தி சாயும் நேரமும்தானாம். இடையில் அவை அதி தீவிரமாக செயல்படுவதில்லையாம்.

கார்பன் டை ஆக்சைடும் கூட கொசுக்களின் சுறுசுறுப்புக்கு இன்னொரு காரணம். அதன் அடர்த்தி அதிகம் இருந்தால் கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

அதேபோல ஒருவரது உடலின் வாசனையை வைத்தும் கொசுக்கள் குறி வைத்துக் கடிக்குமாம். குறிப்பாக மோசமான உடல் துர்நாற்றம் உடையவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்குமாம். அப்படிப்பட்டவர்களை 100 மீட்டர் தூரத்திலேயே அவை மோப்பம் பிடித்து விடுமாம். கொசுக்களின் ரகசியம் தெரிஞ்சிருச்சுல்ல.. இனிமேலாவது குளிச்சு சுத்தபத்தமா இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வோம்...

No comments:

Post a Comment