Tuesday 1 November 2022

காலமறிதல் - 9

 



பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடைய அரசர்கள் தன் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டி விட மாட்டார்கள். காலம் பார்த்துத்தான் தன் கோபத்தைக் கூட வெளிப்படுத்துவார்கள் என்கிறது இக்குறள்.

மனத்தை நிதானமாகவும் தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பவர்களால் மட்டுமே பொறுமையாகச் செயல்பட முடியும். உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு இந்த நிலை கை கூடாது. மன்னர்கள் உணர்ச்சி வசப்படவும் கூடாது.

No comments:

Post a Comment