Wednesday 28 December 2022

ஐம்பெருங்காப்பியங்கள் மணிமேகலை

 


மணிமேகலை
  • ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்
  • காலம் 2 ஆம் நூற்றாண்டு
  • இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு
  • பௌத்த காப்பியம்
  • தமிழன் இரண்டாம் காப்பிய நூல்
  • சமய பூசலுக்கு வித்திட்ட நூல்
  • துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்
  • பெண்ணின் பெருமை பேசும் நூல் (சிலப்பதிகாரம் போன்று)
  • சங்க இலக்கியம் இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தது திருக்குறள் இல்லறம் துறவறம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்தது மணிமேகலை துறவுக்கு முதன்மை கொடுத்தது.

நூல் அமைப்பு:

  • காண்டப் பிரிவுகள் இல்லை
  • 30 காதைகள் உள்ளன
  • முதல் காதை விழாவறைக் காதை
  • இறுதிக் காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
  • முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது.
  • 27-வது சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை மட்டும் இணைக் குறள்
  • ஆசிரியப்பாவாலானது மற்றவை நிலை மண்டில ஆசிரியப்பாக்கள்

ஆசிரியர் குறிப்பு:

  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
  • இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்
  • கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
  • இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
  • இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.
  • இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
  • தண்டமிழ் ஆசான் சாத்தன் தன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாராகப் பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

நூற்குறிப்பு:

  • மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் இந்நூலுக்கு மணிமேகலையைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
  • இந்நூல் சொற்சுவையுமம் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. பௌத்த மதச் சார்புடையது.
  • முப்பது காதைகளைக் கொண்டது
  • முப்பது காதைகளுள் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை இருபத்து நான்காவது காதை.

கதை மாந்தர்:

  • மணிமேகலையின் தோழி சுதமதி கண்ணகியின் தோழி தேவந்தி
  • ஆதிரையின் கணவன் சாதுவன்
  • மணிமேகலைக்கு முதன்முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் ஆதிரை
  • ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவள் காய சண்டிகை
  • விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் காய சண்டிகை
  • காய சண்டிகையின் பசிநோயைப் போக்கியவள் மணிமேகலை
  • மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்ற தெய்வம் மணிமேகலாத் தெய்வம்
  • மணிமேகலாத் தெய்வம் மணிமேகலைக்குக் கொடுத்த வரம் மூன்று
  • ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்தது சிந்தாதேவி
  • அமுதசுரபியைக் கோமுகியில் இட்டவன் ஆபுத்திரன்
  • அமுத சுரபி பற்றி மணிமேகலைக்குச் சொன்னது தீவதிலகை

இடங்கள்:

  • மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
  • மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
  • மணிமேகலை சமயவாதிகளிடம் உண்மை கேட்ட ஊர் வஞ்சி மாநகரம்
  • பூம்புகாரில் உள்ள சோலைகள் : இலவந்திகை, உய்யாவனம், உவவனம், கவேரவனம், சம்பாதிவனம்
  • மணிமேகலை பூக்கொய்யச் சென்ற வனம் உவவனம்
  • மணிபல்லவத்தில் இருந்த பீடிகை புத்தபீடிகை
  • அமுத சுரபி இருந்த இடம் கோமுகி
  • அமுத சுரபிக்கு வேறு பெயர் அட்சய பாத்திரம்

செய்திகள்:

  • சம்புத் தீவின் தெய்வம் சம்பு
  • சம்புத் தீவிற்கு நாவலந்தீவு என்ற வேறுபெயரும் உண்டு
  • நாவலந்தீவு என்பது இந்தியா
  • சம்பாபதி புகார் நகரத்திற்குக் காவிரி பூம்பட்டினம் என்று பெயர் அளி;த்தது.
  • முதன்முதலில் இந்திரவிழா எடுத்தவன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
  • இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்.
  • மழை வேண்டி எடுக்கப்படும் விழா இந்திரா விழா
  • பூம்புகாரில் இந்திரவிழா மிகச் சிறப்பாக நடந்ததாக சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டு நூல்களும் கூறுகின்றன.
  • மூவகைப் பத்தினிப் பெண்டிர்
    1. உடன் எரி மூழ்குவர்
    2. தனிஎரி மூழ்குவர்
    3. கைம்மை நோன்பு நோற்பார்
  •  உடல் அடக்க முறை ஐந்து
    1. சுடுதல்
    2. வாளா இடுதல்
    3. தோண்டிப்புதைத்தல்
    4. பள்ளத்தில் அடைத்தல்
    5. தாழியில் கவிழ்தல்
  • தீயவை பத்து
    1. கொலை 2. களவு 3. காமம்
    4. பொய் 5. குறளை 6. கடுமொழி
    7. பயனில் சொல் 8. வெஃகல் 9. வெகுளல்
    10. பொல்லாக்காட்சி

No comments:

Post a Comment