Thursday 29 December 2022

சீவக சிந்தாமணி

 


 சீவக சிந்தாமணி
  • ஆசிரியர் திருத்தக்க தேவர்
  • காலம் 9 ஆம் நூற்றாண்டு. கருத்து வேறுபாடு உண்டு.
  • திருத்தக்க தேவர் நிலையாமை குறித்து எழுதிய நூல் நரிவிருத்தம்
  • விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
  • சமணக் காப்பியம்
  • மணநூல், காமநூல்,முக்தி நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • வட மொழியில் உள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது சீவக சிந்தாமணி
  • காண்டப் பிரிவு இல்லை
  • 13 இலம்பகங்களையும் 3145 பாடல்களையும் கொண்டது.
  • முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்
  • காப்பியத் தலைவன் சீவகன்
  • சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
  • சிந்தாமணி என்பது கேட்டதைக் கொடுக்கும்
  • தேவலோகத்தில் உள்ள ஒரு மணி (ரத்தினம்)
  • சீவகனின் தந்தையான சச்சந்தனைக் கொன்றவன் கட்டியங்காரன்
  • சீவகன் பிறந்த இடம் சுடுகாடு
  • சீவகனை எடுத்து வளர்த்தவன் கந்துக்கடன் என்னும் வணிகன்
  • சீவகனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் அச்சணந்தி
  • திருத்தக்கதேவர் சோழர்குலத்தில் பிறந்தவர் இவர்.
  • இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
  • இவர் பாடிய மற்றொரு நூல் நரி விருத்தம் ஆகும்.

நூல் குறிப்பு:

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி
  • இந்நூலின் கதைத் தலைவன் சீவகன்
  • அவன் பெயரை இணைதத்துச் சீவகசிந்தாமணி எனப் பெயர் பெற்றது என்பர்.
  • இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.

சிறப்பு:

  • அனைத்துச் சமயத்தவரும் விரும்பிக்கற்ற சமணக் காப்பியம்
  • சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிக்கற்ற காப்பியம்
  • நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.
  • இவர் இருமுறை உரை எழுதினார் என்பர்
  • சைவரான உ.வே.சா. அவர்கள் முதன் முதலில் பதிப்பித்தார்.
  • அவர் பதிப்பித்த முதல் நாலும் சீவகசிந்தாமணியே ஆகும்.
  • கிறித்துவரான ஜி.யு.போப் இதனை இலியட் ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment