Tuesday 27 December 2022

ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம்

 


சிலப்பதிகாரம்

நூற் குறிப்பு:

  • சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.
  • சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்,
  • வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக் காண்டம் பதின்மூன்று
  • காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது.
  • இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
  • முதற் காப்பியம், இரட்டைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றி புகழ்வோர்.
  • ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்
  • ஆசிரியர் இளங்கோவடிகள்
  • இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் குடவாயிற் கோட்டம் என்ற ஊர்.
  • குடவாயிற் கோட்டம் சேர நாட்டு ஊர்
  • மூன்று காண்டம் முப்பது காதை
  • காதை – கதை பொதிந்துள்ள பாட்டு
  • புகார் காண்டம்: மங்கல வாழ்த்துப் பாடல் முதல் நாடுகாண் காதை வரை உள்ள 10 காதைகள்
  • மதுரைக் காண்டம்: காடுகாண் காதை முதல் கட்டுரைக் காதை வரை உள்ள 13 காதைகள்
  • வஞ்சிக் காண்டம்: குன்றக் குரவை முதல் வரந்தருகாதை உள்ள 13 காதைகள்
  • சிலப்பதிகாரம் ஆசிரியப் பாவாலும் கொச்சகக் கலிப்பாவாலும் ஆனது.

ஆசிரியர் குறிப்பு:

  • இளங்கோவடிகள் சேர மரபினர்
  • இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை
  • இவரது தமையன் சேரன் செங்குட்டுவன்
  • இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
  • அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.
  • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

சிலம்பின் புகழ்:

  • “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
    மணியாரம் படைத்த தமிழ்நாடு” – பாரதியார்
    “சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் … தமிழ்ச்
    சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி
    கொண்டிருந்தேன்” – பாரதியார்
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
    வள்ளுவனைப் போல் இளங்கோவனைப் போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” – பாரதியார்
  • “தமிழ் கூறும் நல் உலகம்” என்று மூன்று நாடுகளையும் ஒருங்கே காணும் தன்மை தொல்காப்பியத்தில் உண்டு. ஆனால் சங்க இலக்கியத்தில் இல்லை.
    “முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள் – மு.வரதராசனார்.
  • நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து முதலில் பாடியவர் இளங்கோவடிகள்
  • நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து இணங்கோவடிகளை அடுத்துப் பாடியவர் மாணிக்கவாசகர்;
  • சைவ வைணவ நெறிகளையும் பாடிய சமணநூல் சிலப்பதிகாரம்
  • முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம்
  • முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம்
  • இரண்டாவது தமிழ் தேசிய காப்பியம் பெரிய புராணம்
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
  • சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.

முக்கிய கதை மாந்தர்கள்:

  • தலைவன் கோவலன்
  • தலைவி கண்ணகி (சங்க காலத்துக் கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் மனைவி பெயரும் கண்ணகி)
  • ஆடல் மங்கை மாதவி
  • கோவலன் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகியின் தந்தை மாநாய்கன்
  • மாதவியின் தாய் சித்திராபதி
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை
    கண்ணகியின் தோழி தேவந்தி (இவள் ஓர் அந்தணப் பெண் இவள் கணவன் பாசண்ட சாத்தன்)
  • மாதவியின் தோழி வயந்தமாலை
  • பெண் சமணத்துறவி கவுந்தியடிகள்
  • ஆண் பௌத்தத் துறவி அறவண அடிகள்

செய்திகள்:

  • சிலம்பின் குறிக்கோள் மூன்று
  • கோவலன் – மாதவி பிரிவுக்குக் காரணம் ஊழ்
  • கோவலன் மதுரை சென்றதுக்குக் காரணம் ஊழ்
  • கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் ஊழ்
  • மதுரை எரிந்ததற்குக் காரணம் ஊழ் என்று இளங்கோவடிகள் கருதுகிறார்.
  • இளங்கோவடிகளுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
  • கண்ணகியின் வரலாற்றைச் சீத்தலைச் சாத்தனார் எழுத வேண்டும் என்று சொன்னவர் இளங்கோவடிகள்
  • கண்ணகியின் வரலாற்றை எழுதத் தகுதியுடையவர் இளங்கோவடிகளே என்று சொல்லி அவரே எழுத வேண்டும் என்று சொன்னவர் சீத்தலைச் சாத்தனார்.
  • இளங்கோவடிகள் தம் நூலைச் சீத்தலைச் சாத்தனார் முன் அரங்கேற்றினார்.

No comments:

Post a Comment