Thursday 16 February 2012

பலா பழம் / காய்

இந்த வருசம் தோட்டத்திலிருக்குற பலா மரத்துல ஏழெட்டு காய் காச்சிருக்கு..
சின்ன மரம்தான்.. போன வருசம் முத முதலா காய்க்க ஆரம்பிச்சுது..
சுந்து, ஷீலா வந்தப்ப ஒரு காயப் பறிச்சு தீயக்கறி பண்ணி ஒரு கட்டு கட்டுனோம்..

எதுக்கு இந்த blog ல பலா பத்தி சொல்றேன்னா, ஒரு பழைய தமிழ் பாட்டு கிடைச்சது..
அது ஒரு பலாபழத்துக்குள்ள எத்தனை சுளைகள் இருக்குதுன்னு கண்டு பிடிக்க வழி சொல்லுது..

அந்த பாட்டு –

" பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"

அர்த்தமென்னான்னா
பலாப்பழத்தோட காம்பச் சுத்தி எத்தன முள்ளு இருக்குன்னு எண்ணி அத ஆறால பெருக்கி அஞ்சால வகுத்தா வர்றதுதான் பழத்துக்குள்ளே இருக்குற சுளைகள்.. i.e., No of சுளைகள் = No of முள்ளுகள் around காம்பு X 6 /5

இந்த மாதிரி ரிசர்ச் ஏன் பண்ணுனாங்க - பொழுது போகலையா இல்ல வேற ஏதாவது
ட்ரை பண்ணுனாங்களா...?

என்னைப் பொருத்தவரையில இந்த பாட்டுல தப்பு இருக்குற மாதிரி தெரியுது..

இந்த formula வ இதுவரைக்கும் செக் பண்ணல...
இந்த வருசம் சரியா இருக்கான்னு பாக்கணும்..

2 comments:

  1. எத்தனை முள் இருந்தால் என்ன எத்தனை சுளை இருந்தால் என்ன ... எனக்கு வேண்டியதெல்லாம் பலாக்காய் தீயகறி :P :P

    ReplyDelete
  2. பலாக்காய் தீய கறி, ரொம்ப நல்ல கறி (:-P............
    I love the பலா பழம் too (will take Sheila's share) :)

    ReplyDelete