Monday 27 February 2012

கேள்வி ஞானம்

ஞான வயல்ன்னு பேர வச்சுட்டு ஒரு ஞானமும் இதுல காணும்ன்னு
கம்ப்ளைன்ட் நெறையா வந்துடுச்சு..
எனவே கேள்வி ஞானம் அப்படீங்கரதப் பத்தி கொஞ்சம் பாக்கலாம்...

நா எப்ப கிளாஸ் எடுத்தாலும் partcipants ஐ கேள்வி கேக்க தூண்டுவேன்..
முதல்ல எல்லாரும் தயங்குவாங்க..
நா மறுபடியும் அவங்க கிட்ட சொல்லுவேன் -
"ஒரு விஷயம் தெரியல, புரியல ன்னா கேள்வி கேட்டாதான் விளக்கம் கிடைக்கும்..
அதனாலே உங்க சந்தேகங்கள கூச்சப் படாம கேளுங்க "
அப்பவும் கேள்வி வராது..
" ஒரு விஷயத்தை சரியா தெரிஞ்சிக்காதவன் முட்டாள். அப்ப வாழ்நாள் முழுக்க முட்டாளாகவே
இருக்கப் போறீங்களா? " - இப்படி கேட்டதும்தான் கேள்விகள் வரத் துவங்கும்.
அப்புறம் அவங்களுக்கு சூரியன் FM ரேடியோ ஸ்லோகனை ஞாபகப்படுத்துவேன் -
" கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க " - இதை சொல்லிட்டு விளக்கம் கொடுப்பேன்.
முதல் "கேளுங்க" வுக்கு அர்த்தம் - நா சொல்றத காது கொடுத்து கவனமா கேளுங்க
அடுத்த " கேளுங்க" வுக்கு அர்த்தம் நா சொன்னதுல உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள கேளுங்க..
"கேட்டுகிட்டே இருங்க" ன்னா உங்களுக்கு எது தேவையோ அதை கேட்டுகிட்டே இருங்க...
கேட்டாதான் கிடைக்கும்.." - இப்படி சொன்னப்பறம் கேள்விகளா கொட்டும்!

அப்புறம் கேள்வி ஞானத்துக்குன்னு சில சினிமா பாட்டுகள் இருக்கு..அதையும் சொல்லி அவங்கள நல்லா தயார் பண்ணுவேன்...!

ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் யாரும் இல்லை
நான் என்ற எண்ணம் -
கொண்டமனிதன் வாழ்ந்ததில்லை
முன்னேற்றம் என்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதினாலே!
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
புரட்சிகள் எழுவதினாலே!


கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?


என் கேள்விக்கென்ன பதில்?
உன் பார்வைக்கென்ன பொருள்?


கேள்வி பிறந்தது அன்று --
நல்லபதில் கிடைத்தது இன்று
ஞானம் பிறந்தது அன்று --
யாவும் நடந்தது இன்று.


கடைசியா ஒண்ணு -
குண்டக்க மண்டக்க மற்றும் ஏடாகூடமா கேள்வி கேக்கறவங்கள
சமாளிக்கவும் தெரிஞ்சு வச்சுருக்கணும்!!




29 comments:

  1. Agree JP. The only stupid question is the one that was never asked :))

    ReplyDelete
  2. two of my fav songs...

    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?


    என் கேள்விக்கென்ன பதில்?
    உன் பார்வைக்கென்ன பொருள்?

    ReplyDelete
  3. சில பேர் கேக்காமலே எல்லாம் கைலே வந்து விழும்னு அசட்டு நெனப்புல இருக்காங்க.... அவங்களுக்கு "கேட்டால்தான் கிடைக்கும்" ன்னு கொஞ்சமாவது ஞானத்தை வளர்த்தி வுடுங்க.. :)

    ReplyDelete
    Replies
    1. Sheila
      நான் நினைச்சாலே எல்லாம் கைலே வந்து விழுது,நினைத்தது கிடைச்ச அப்பறம் எதுக்கு கேக்கணும் :)

      Delete
    2. btw Sri...sorry for getting personal in this space...but since you brought it up can't help asking as I'm inspired by JP's " கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க " ஞானம்...

      ஒனக்கு உன் line le job கெடைக்கணும்னு நீ நெனைக்கவே இல்லையா ???? :)

      Delete
    3. Nope in my prayers I will never ask for anything particular, I always pray whatever best should happen to me :)

      Delete
    4. ohh...and here i was thinking you never ask for anything...only think and it happens!!

      quoting ur words...,நினைத்தது கிடைச்ச அப்பறம் எதுக்கு கேக்கணும்... ur response and ur slogan don't match

      Delete
    5. btw...ஏடா கூடமா குண்டக்க மண்டக்க கேள்விகள கேக்க தயங்கவே மாட்டேன்... :)

      Delete
    6. for eg if I need a car I wont ask for a particular car just a car it will come to me! similarly I didnt ask for a particular job but a job!

      Delete
    7. Seriously Sri...ஓசி பொழப்பு ஒரு பொழப்பா??

      too bad your dad got me started in this கேள்வி ஞானம் :)

      Delete
    8. இங்க நான் சொல்றது விஷய ஞானம்...
      கடவுளிடம் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை..!
      செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைப்பு இருக்க
      விளைவறிந்து செயலாற்றினாலே நாம் நினைத்தது நடக்கும்.

      Delete
    9. sri

      you should say மடியில் வந்து விழுது :)

      Delete
    10. I was also referring to விஷய ஞானம் in my original comment and believe in good thoughts leading to good deeds
      Sri sidetracked me into asking அடாவடி குண்டக்க மண்டக்க கேள்விகள் which is also covered in your post

      I was also following what you said ...."ஒரு விஷயம் தெரியல, புரியல ன்னா கேள்வி கேட்டாதான் விளக்கம் கிடைக்கும்..
      அதனாலே உங்க சந்தேகங்கள கூச்சப் படாம கேளுங்க "... :)

      Delete
    11. no shiel you the one who started...go above and see....sri is goodie-nicey boy

      Delete
    12. ok..let it be that I started...விஷயம் புரியலேன்னுதான் கேள்வி கேக்க ஆரம்பிச்சேன் ....நான் கேட்ட கேள்விக்கு "goodie-nicey boy" பதில் சொல்லலையே...

      btw...ask your "goodie-nicey boy".... நெனச்சவுடனே இப்ப என்ன மடிலே வந்து விழுந்துருக்குன்னு ;)

      Delete
  4. a word of caution...

    நான் கேள்வி கேக்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேன் ....
    அதே சமயம்.. குண்டக்க மண்டக்க கேள்விகளையும் சமாளிக்க தெரியும் :)

    ReplyDelete
    Replies
    1. இங்லீஷை தமிழ்ல ஆங்கிலம்ன்னு சொல்றோம் அப்போ தமிழை ஏன் ஆங்கிலத்துலயும் தமிழ்ன்னு சொல்றோம்?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. it's not called தமிழ்...it's called 'Tamil' in English :)

      Delete
    4. why don't other languages have different names in தமிழ்?

      Delete
    5. Because in French British ppl are called Anglais and we got the word from them!

      Delete
    6. oh! i dunno that' Good enlightenment :)

      Delete
  5. கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?


    என் கேள்விக்கென்ன பதில்?
    உன் பார்வைக்கென்ன பொருள்?

    MALA : BEWARE, REDUCE your touring and ask JP - யாரை பார்த்து இந்த பாட்டு பாடுர ?? J

    ReplyDelete
  6. KG, MALA knows JP can Only sing these days so no worries :)

    ReplyDelete
    Replies
    1. ...or maybe Mala knows that JP பாட்டு பாடினால் எல்லாரும் ஓடிடுவாங்க (including Mala) :)

      Delete