Sunday 19 February 2012

கிராமிய சேவை

மாலா தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தைத் தத்து எடுத்து அங்கு சேவை தொடங்க இருக்கின்றோம். இந்த சேவை பற்றி கீழே....

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத் திட்டம்

நோக்கம்:

இந்திய நாட்டில் கிராமங்கள் அதிகமாக உள்ளன. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்புகளாக உள்ளன.

கிராம மக்கள் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் மேலும் வளர வேண்டும்.

கிராமத்து மக்கள் இயல்பாகவே கடும் உழைப்பாளிகள், பெரும்பாலும் சூதுவாது அற்றவர்கள்.

எளிமையான வாழ்வு வாழ்பவர்கள்.

இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் இல்லாததற்கு காரணம் சரியான கல்வியும், வழிகாட்டுதலும் இல்லாமையேயாகும்.

கிராமப்புற மக்களின் உடல், உயிர், மனம், அறிவு மற்றும் குடும்பம் மேம்படவும்,

சாதி, இன, மத வேறுபாடுகள் இன்றி மனிதநேயத்தோடு ஒத்தும் உதவியும் வாழ்வதற்காகவும்,

கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகா கற்றுக் கொடுப்பதற்காக உலக சமுதாய சேவா சங்கம் ஒரு சிறப்புத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கம்-கிராமிய சேவைத் திட்டம் (The World Community Service Centre – Village Service Project சுருக்கமாக WCSC-VSP) என்ற பெயரில் துவக்கியுள்ளது.

பதினான்கு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் முழுமை நல வாழ்விற்கான மனவளக்கலை யோகா கற்பிக்கப்படுகிறது.

திட்டத்தின் பயன்கள்

உடல் நலம் காக்கஎளியமுறை உடற்பயிற்சிகள்

மனஅமைதி பெறஎளியமுறை தியானப் பயிற்சிகள்

உயிர்வளம் காக்கசித்தர்கள் பயிற்சி முறையான காயகல்பப் பயிற்சி

நற்பண்புகளை அடையஅகத்தாய்வு பயிற்சிகள்

விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலை பெறசெயல்விளைவுத் தத்துவம்.

அறவாழ்வுகடமைகளைக் கர்மயோக நெறிப்படி செய்தல்.

புறத்தூய்மைசுற்றுப்புற சுகாதாரம்

அகத்தூய்மைஅமைதியான வாழ்க்கை

இணைந்து வாழ்தல்மனிதநேயம்

மெய்ப்பொருள் பற்றிய அறிவுஇறைத்தத்துவம்

ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.

தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்து வெற்றி பெறத் தேவையான கர்மயோக நெறிகளை ஆசான் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்துக் கொடுத்துள்ளார்கள்.

இப்பயிற்சிகளை செய்வதன் மூலம் கிராமப்புற மக்கள் உடல்நலம் பெறுவார்கள். மனதில் அமைதியும், நிறைவும், மகிழ்ச்சியும் அடைவார்கள். ஒழுக்கம், நன்னெறிகள் மற்றும் நற்பண்புகள் நிறைந்த அறநெறி வாழ்க்கையை வாழ்வார்கள்.

கிராமிய சேவைத் திட்ட காப்பாளர்கள்

அருள்தந்தை அவர்களின் கர்மயோக வாழ்க்கை நெறிகளை ஏற்றுக் கொண்டவர்களும், மேலும் விருப்பம் உள்ளவர்களும் இத்திட்டத்தில் கர்மயோக காப்பாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

குறைந்தது தினமும் 1 ரூபாய் என்ற வகையில் ஆண்டிற்கு ரூ.360/-ம் அதற்கும் அதிகமாகவோ () வருமானத்தில் ஒரு சகவிகிதமோ (1%) அல்லது அதற்கும் அதிகமாகவோ நன்கொடைகள் செலுத்தி கர்மயோக காப்பாளர்களாக தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

ஆண்டிற்கு ஒருமுறை காப்பாளர்கள் தவறாது நன்கொடை செலுத்தி கர்மயோக காப்பாளர்கள் என்ற தகுதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

காப்பாளர் நிதியை தங்கள் ஊரிலுள்ள ஆக்ஸிஸ் வங்கியில் வருடத்திற்கொருமுறை செலுத்தலாம்.

காப்பாளர்கள் நன்கொடையிலேயே இத்திட்டம் செயல்படும்.

காப்பாளர்கள் அல்லாதவர்களிடமிருந்தும் இத்திட்டத்திற்கு நன்கொடை பெற்றுக் கொள்ளப்படும்.

திரும்பப் பெறாத வைப்பு நிதியாக (Non Refundable Deposit) ரூபாய் 5,000/-, 10,000/-, 1,00,000/-, 10,00,000/-ம் அல்லது அதற்கு மேலும் வழங்கலாம். இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி முழுவதும் காப்பாளர் நன்கொடையாக கணக்கிடப்படும். நன்கொடைகளுக்கு 80G வருமானவரி சலுகை உண்டு. இவர்கள் நிரந்தர கர்மயோக காப்பாளர்கள் இருப்பார்கள்.

வங்கி கணக்கு விபரம்:

வங்கியின் பெயர் : AXIS BANK (Payable at Erode)

வங்கி கணக்கு பெயர் : WCSC-VSP

வங்கி கணக்கு எண் : 911010047117701

IFS CODE : UTIB 0000118

WCSC – VSP

கிராமிய சேவைத்திட்டத்தின் இலக்கு

சுற்றுப்புற சுகாதாரம்

நோயற்ற வாழ்வு

முதியோரை பாதுகாத்தல்

குடும்ப அமைதி

சமுதாய விழிப்புணர்வு

கல்வியில் மேன்மை

மனிதநேயம்

மத நல்லிணக்கம்

அமைதியான கிராமம்

இங்ஙனம்,

குருவின் சேவையில்

SKM. மயிலானந்தன்

தலைவர்,

உலக சமுதாய சேவா சங்கம்

மற்றும் உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment