- We will be loved for sure but never forever . நீங்கள் நிச்சயமாக பிறரால்( நெருக்கமானவர்களால்)நேசிக்கப்படுவீர்கள் . ஆனால், என்றென்றும் அல்ல .
- சில சமயங்களில் தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்பதை விட தெரியாதவரிடம் கேட்பது எளிது.
- என்னதான் மனம்,குணம் ,அன்பு என்றாலும்கூட பொதுவாக புறத்தோற்றமும் அழகும் அதிக ஆதிக்கம் செய்யும் .
- வாழ்க்கைக்காக வாழ்வாதாரத்திற்காக வேலை செய்வதை விட வேலையைப் பொருத்து வாழ்க்கையை தான் மாற்றி வாழ்கிறோம்.
- அறிவார்ந்த விசயங்களை விட அடுத்த வீட்டு கதைகளைக் கேட்க ஆர்வம் அதிகம்.அறிவுப்பூர்வமான விசயங்களை பேசும் போது boring எனப்படுபவர் ,gossip பேசினால் centre of attention ஆகி விடுவார்.
- ஒருவரின் படிப்போ,வேலையோ,அவரின் பொருளாதார நிலையோ ,அவரின் அறிவையும் ,நாகரிகமான சொல்/ செயல்கள் / நடத்தையை தீர்மானிக்காது.
- பலருக்கு கடவுள் , கஷ்டங்களை தீர்ப்பதை விட கஷ்டங்களை மனம் விட்டுச் சொல்லவே அதிகம் தேவைப்படுகிறார்.
- எல்லா தோல்விகளும் வெற்றிக்கு முதல் படி அல்ல.
- ஒருவரிடம் '' உன்னைப் பிடிக்கவில்லை "என்று சொல்வதை விட "பிடிக்கும்" என்று சொல்ல அதிக தைரியம் வேண்டும். அதேபோல் ஒருவரை திட்டுவதை விட பாராட்டுவது கடினம் . தொடர்ந்து 5 நிமிடம் / அரைமணிநேரம் திட்டும் நம்மால் ஒருவரை 5 வார்த்தைகள் சொல்லி பாராட்ட கஷ்டப்படுவோம்.
- Mild melancholy is poetic but beyond limit ,it is problematic or blabbering both in life and literature . Thanks Quora
No comments:
Post a Comment