Sunday, 31 August 2025

அதிர்ஷ்டம்

 நம் எல்லோருக்கும்,

உலகிலுள்ள எல்லாவற்றையும் தெரிந்து வெற்றி கொள்ள ஆசை;

உலகின் மிகப் பெரிய பணக்காரனாக ஆசை;

உலகையே ஆளுகின்ற பதவியில் அமர ஆசை;

இப்படித் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று பேராசை எல்லோரிடமும் உண்டு. இந்த ஆசைகள் நமக்கு மட்டும் இல்லை. எல்லாவற்றையும் துறந்துவிட்டதாக கூறும் ஒரு சில சாமியார்கள் கூட உலகரங்கிள் பெரும் பெயரும், மதிப்பையும், செல்வாக்கையும் பெற ஆசைப்படுகின்றனர்.

முதல் கேள்வி

ஆசைகள் ஆயிரமாயிரம் இருக்கலாம், ஆனால் அதை சாதிப்பதற்கான அடிப்படைத் தகுதியும், ஆற்றலும், திறமையும், நம்மிடம் இருக்கிறதா? என்பது முதல் கேள்வி.

எண்ணற்ற சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள்

  • தகுதி என்பது பிறப்பால் வருவது அன்று, நாம் வளர்த்துக் கொள்வதென்று.
  • ஏதேனும் திறமை இல்லாவிட்டாலும், பயிற்சியின் மூலம் அடிப்படையிலிருந்து நிபுணத்துவம் வரை வளர்க்க முடியும் என்று.

உண்மைதான்

  • தகுதி, ஆற்றல், திறமை, என்று இல்லாத எல்லாவற்றையும் நம்மால் முயற்சித்தால் வளர்த்துக்கொள்ள முடியும்;

இரண்டாவது கேள்வி

“முயற்சித்தால் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்”

“முயற்சித்தால்” “முயற்சித்தால்” “முயற்சித்தால்”

நாம் முயற்சி செய்கின்றோமா? என்பது இங்கு இரண்டாவது கேள்வி

உண்மையில் சொன்னால்,

  • தொலைக்காட்சி பார்ப்பது,
  • கைபேசியில் தேவையின்றி நேரம் செலவளிப்பது,
  • சமூக வலைதளங்களில் வெருமனே நேரம் செலவிடுவது,
  • தேவையற்ற வீண் அரட்டை,

போன்ற பல செயல்கள் நம் இயல்பான சோம்பேறித்தனத்திற்கு ஒத்துப் போவதால், அதையே தினம்-தினம் திரும்பத் திரும்ப செய்து நேரத்தை கழிக்கிறோம்.

இப்படி தேவையற்றவைகளுக்கு அதிக நேரம் செலவிடுவதால், வெற்றிக்குத் தேவையானவற்றிற்க்கு முயற்சி செய்ய நேரம் இருப்பதில்லை

"திறமைகளை வளர்த்துக் கொள்ளாவிட்டால்

வாழ்க்கையில்

எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தாலும் பயனில்லை;

உண்மையில் சொன்னால் திறமையில்லாதவனுக்கு

“அதிர்ஷ்டம்” கூட ஒரு வகையான “துரதிஷ்டம்” தான்"

மூன்றாவது கேள்வி

நம்முடைய வாழ்க்கையில் ஆசைகளை அடைய தேவையான திறமைகளை வளர்க்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் எப்படி வளர்ப்பது? என்பது மூன்றாவது கேள்வி

ஒரு வார்த்தை பதில் - முயற்சி

முழுமையான பதில் - கற்றல், திட்டமிடல், பயிற்சி, விடாமுயற்சி

உங்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்க விருப்பம் இருந்தால் அதற்குரிய நூலையும், கற்பிக்கும் ஆசிரியரையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எதையும் செய்யாமல் அது தானாகவே நம் வீட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். உங்கள் ஆசைகளை மெய்பிக்க, நீங்கள் படிப்படியாய் “உங்களை” வெற்றி கொள்ள வேண்டும்.

வெற்றிக்குத் தேவையான திறமைகளை பட்டியலிடுங்கள்;

அவற்றை முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்துங்கள்;

அவற்றில் ஒவ்வொன்றாய் எடுத்து

உங்கள் முழு ஆற்றலோடு கற்று செயல்படுத்துங்கள்;

எந்தவொரு எட்டாக்கனியான வெற்றியும்

எட்டும் தூரத்தில் வந்து நிற்கும்

No comments:

Post a Comment