Wednesday, 12 December 2012

கடவுளை காணவேண்டும்


ஒரு ஊருலெ ஒரு சித்தர் இருந்தார். 
சூஃபி சித்தர். ஞானம் பெற்ற ஒரு சித்தர் அவர். 

 ஒருநாளு அந்த நாட்டு மன்னன் அவரை பாக்குறதுக்காக வந்தான்.

" என்ன வேணும் உனக்குன்னு"  கேட்டார். 

'நான் கடவுள பாக்கனும் அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும்' அப்படீன்னான் அவன்.

 சித்தர் கொஞ்சம் யோசனை பண்ணுனார். 

'சரி, போய்ட்டு நாளைக்கு வா’ன்னாரு. 

 அதேமாதிரி மன்னன் போய்ட்டு அடுத்த நாள் வந்தான். 

'இங்கெ என்னோட ஒருவாரம் தங்கியிருக்கவேணும்' ன்னு சொன்னார்.

 'சரி’ன்னான். 
ஒரு பிச்சைப்பாத்திரத்த தூக்கி கையில கொடுத்தார். 
அவனுக்கு ஒண்ணும் புரியலே.இருந்தாலும் வாங்கிட்டான். 

வாங்கிட்டு , 'இத என்ன செய்யனும்' அப்படீன்னு கேட்டான். 

'ஒண்ணும் செய்யவாணாம், இத எடுத்துட்டு பக்கத்துல உள்ள கிராமங்களுக்கு போ, வீடு வீடா பிச்சையெடுத்துட்டு வா..அப்படி வந்த பொறவுதான் உனக்கு சாப்பாடும் ஓய்வும் கிடைக்கும்; ஒருவாரம் அப்படி செய்யி. அதுக்கப்புறம் – எட்டாவது நாளு – நாம கடவுள பத்தி யோசிக்கலாம்' அப்படீன்னாரு சித்தரு.

 இப்படி அவர் சொன்னத கேட்டதும் அரசனுக்கு அதிர்ச்சியாயிட்டது. ஒருமாதிரியா ஆயிட்டான். தன்னுடைய சொந்தநாட்டுல சொந்தக்குடிமக்கள்ட்டெ போயி பிச்சையெடுக்குறதா அப்படீன்னு யோசனை பண்ணினான். 

அதுக்கப்புறம் மெதுவா அந்த சித்தரைப் பார்த்தான். 'ஐயா, சொந்தநாட்டுலேயே பிச்சையெடுக்குறதுன்னா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, வெட்கமா இருக்கு, வேணும்னா வெளிதேசத்துலெ எங்கேயாவது போயி பிச்சையெடுக்கவா?'ன்னு கேட்டான். 

 இதுக்கு அந்த சித்தர் சம்மதிக்கலே. 

'இதோபாரு, உன்னால பிச்சையெடுக்க முடியலேன்னா பேசாம திரும்பி அரண்மனைக்கே போயிடு, அதுக்கப்புறம் கடவுளைப்பத்தியெல்லாம் பேசுறதுக்கு என்னை தேடிட்டி வரப்படாது' அப்படீன்னுட்டார். 

மன்னன் தயங்குனான். இருந்தாலும் மனசை சரிபண்ணிட்டு சம்மதிச்சான். 'சரிங்க, ஒருவாரம் இங்கே தங்குறேன். நீங்க சொல்லுறமாதிரி பக்கத்து கிராமங்களுக்கு போறேன், வீடு வீடா பிச்சையெடுக்குறேன், வர்றேன்' அப்படீன்னான். 

ஒருவாரம். தெருத்தெருவா பிச்சைபாத்திரத்தோட அலைஞ்சான். சொந்த ஊருல, சொந்த குடிமக்கள்கிட்டே பிச்சையெடுத்தான். ஏழுநாள் முடிஞ்சது. 

எட்டாவது நாளு அந்த சித்தர் மன்னனைக் கூப்புட்டார். 'இப்படிவா’ன்னார். வந்தான். 'இனிமே நீ கடவுள பத்தி எங்கிட்டே கேட்கலாம்'னார்.

' இனிமே கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்லே சுவாமி'ன்னான் இவன். 

ஒருவாரம் பிச்சையெடுத்தபிறகுதான் கடவுள காணமுடியும்டு நான் கனவுகூட காணலேன்னான். 

'அப்படீன்னா நீ பிச்சையெடுத்த காலத்துலெ என்னதான் நடந்தது? அப்படீன்னு கேட்டார்' சித்தர். சுவாமி.. 

'ஒருவாரகாலம் பிச்சையெடுத்ததுலெ என்னுடைய ஆணவம் அழிஞ்ச்சிட்டுது, அது இப்ப இருக்குற இடமே தெரியலே, இப்ப அத காணவே காணோம். பிச்சைக்காரனா இருந்தப்ப பெற்றதை மன்னனா இருக்கும்போது பெறமுடியாதுங்கறதை புரிஞ்சிக்கிட்டேன்'. அப்படீன்னான் மன்னன்.

அடக்கம் பிறந்தவுடன் தெய்வீகக் கதவுகள் திறந்துகொள்கின்றன அப்படீங்குறார் ஓஷோ. 



நம்மாள் ஒருத்தன், ஆணவம் அழியனும்கிறதுக்காக ஒரு திருவோட்டை எடுத்துக்கிட்டு தெருத்தெருவா பிச்சையெடுக்க ஆரம்பிச்சான். 

என்ன, தெய்வீகக் கதவுகள் திறந்துதா? அப்படீன்னு கேட்டார் ஒருத்தர். 

தெய்வீகக் கதவுகள் திறக்குறதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக் கதவு சாத்திக்கிட்டுதுன்னான்.

 என்னடா சொல்றேன்னார். 

இனிமே வீட்டுக்குள்ளேயே வரவேணாம், இதையே தொழிலா வச்சுக்கோ அப்படீன்னு எங்க வீட்டுலெ சொல்லிப்புட்டாங்க சார் அப்படீன்னான்’

 – தென்கச்சி கோ.சுவாமிநாதன்.





Tuesday, 11 December 2012

பாரதியார்





என்னை வழிநடத்தும் ஆன்மீக குருமார்களில் 

ஒருவரான மகாகவி பாரதியாரின் 

பிறந்ததினமான  இன்று 
கீழ்கண்ட அவரின் 
இரு பாடல்களையும் 
ஆழ்ந்து படிக்குமாறு 
கேட்டுக் கொள்கிறேன்.
ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் 
" ஆன்மீக ஆனா, ஆவன்னா "
தொடரின் 'மூலம்' 
இந்த பாடல்களில் 
                                               இருக்கின்றது.


பரசிவ வெள்ளம்


உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.
1
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.
2
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றும்மய லெய்துவதாய்,
3
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்,
4
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,
5
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
6
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.
7
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.
8
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
9
எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
10
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே.
11
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.
12
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
13
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
14
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா !
15
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா !
16
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா !
17
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா !
18
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா !
19
காவித் துணிவேண்டா, காற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே
20
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !
21
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றேயுள்ளதெனச்சிந்தைசெய்தாற்போதுமடா !
22
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்,
வந்தெனுளே பாயுதென்றுவாய்சொன்னாற் போதுமடா !
23
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா !


அறிவே தெய்வம்
ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்லாயிரம் வேதம்
அறிவொன்றே தெய்வமுன்டாமெனல் கேளீரோ? 1
மாடனைக் காடனை வேடனைப்போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எதனூடும்நின் றோங்கும் 
அறிவொன்றேதெய்வமென்
றோதி யறியீரோ? 2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடுமாறிப்பெருமை யழிவீரோ? 3
வேடம்பல்கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர் வேடத்தை
நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4
நாமம்பல் கோடியொர் உண்மைக்குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்நாமத்தை நீருண்மை
யென்றுகொள்வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணுநிலையாமே -
உபசாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்றுகாட்டும் மறைகளெல்லாம் -
நீவிர்அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7
உள்ளதனைத்திலும் முள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற் கரியபிரமமென் றேமறைகூவுதல் கேளீரோ? 8
மெள்ளப் பல தெய்வம் கூட்டிவளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர்மறைகாட்டவும் வல்லீரோ? 9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே. 10

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 22

நண்பன்  நைனா முகமது 


JP & Naina @ Taj 1973

அண்ணாமலைப் பல்கலைக் கழக இன்ஜ்நீரிங்  காலேஜ்ல சேர்ந்ததிலிருந்து நான் BE பிறகு MSc முடித்து நெய்வேலியில் 
வேலை சேர்ந்த வரைக்கும் தினமும் தொடர்ந்த நட்பு  நைனாவுடன்தான் !

சிதம்பரத்தில் இயங்கி வந்த காந்தி மன்றத்தின் தொண்டனாக சமூக சேவைகள் செய்வதிலிருந்து யாருக்கு என்னமாதிரி உதவிகள் தேவைப் பட்டாலும் முதல் ஆளாக நிற்பான் நைனா.

தினமும் கல்லூரிக்கு சேர்ந்தே சைக்கிளில் செல்வோம். இரவு என்னோடு சேர்ந்து படிக்க வருவான். நான் சிதம்பரத்தில் அக்கா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். கீழ வீதியில் காலநாத பிள்ளையார் கோவில் சந்தில் இருந்த அந்த வீட்டுக்கு நைனா வருவது அங்கிருக்கும் நாய் ஒன்று குலைப்பதிலிருந்தே தெரிந்துவிடும். ஒருநாள் அந்த நாய் மீது அவன் சைக்கிளை  ஏற்றியதிலிருந்து  நைனாவைப் பார்த்தாலே அது கோபமாகிவிடும்.

நாகூர் கந்தூரி விழாவுக்கு சிதம்பரத்திலிருந்து சைக்கிளிலேயே  சென்று வருவான்.  நான் விடுமுறைக்கு மாயூரம் வந்துவிட்டால் தன் சைக்கிளுடன் வந்துவிடுவான்.

BE கடைசி வருசம் எங்கள் டீன் ராஜாராமை கலாய்ப்பதெற்கென்றே 
நைனாவுக்கு மாறுவேட போட்டியன்று அனுமார் வேஷம் போட்டு , கர்லா கட்டையை கதையாய்  கொடுத்து வாயில் சின்னதாய் இரண்டு எலுமிச்சம் பழம் வைத்து உப்பவைத்து " ராஜாராமா! கவலைப் படாதே..உன் சீதையை கண்டுபிடித்து தருகின்றேன். உன் கணையாழியை கழற்றி கொடு " என்று சொல்ல சொல்லி டீன் கையிலிருந்த மோதிரத்தை பிடுங்க சொல்லியிருந்தோம்.அவனும் அப்படியே செய்ய ஆரம்பித்ததும்  டீனோ     " இந்த குரங்கை துரத்துங்கடா" ன்னு விரட்டினார். இருந்தாலும்  பரிசை நைனாவுக்கே கொடுத்தார். நான் PG படிக்கும்போது டீன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் " உன் குரங்கு ஃபிரெண்ட்  எப்படியிருக்கான்?" என விசாரிப்பார்.

நான் BE முடித்து MSc சேர்ந்த சமயம் அவன் தந்தை இறந்துவிட சென்னை 
சென்று mixie ஒன்று  டிஸைன் செய்து தயாரித்து 1975ம் ஆண்டு 500 ரூபாய்க்கு விற்றான். நான் பிறகு நெய்வேலியில் சேர்ந்த பிறகு அவனுக்கும் அங்கு வேலை கிடைத்து மறுபடியும் நாங்கள் ஒன்றாக நெய்வேலியில் நட்பைத் தொடர்ந்தோம்.

நான் திருச்சி வந்த பிறகு சேகர் ( அண்ணன் பையன் ) நெய்வேலியில் வேலையில் சேர்ந்தபோது அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தான்.

அவன் திருமணம் மதுரையில் நடைபெற்றபோது நானும், சேகரும் சென்றிருந்தோம். அவனது மனைவியின் குடும்பம் மலேசியாவில் இருந்தது.

மாயூரத்தில் நடைபெறும் எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் கலந்துகொள்வான்.

எனது பிறந்தநாளுக்கு தபால் மூலம் வாழைப்பழம் அனுப்புவான். காய் வெட்டாக இருக்கும் வாழைப்பழம் மேல் என் முகவரி எழுதி ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டுவிடுவான். நானும் due கட்டி அதைப் பெற்றுக் கொள்வேன்!

அம்மா இறந்தபோது துக்கம் விசாரிக்க வந்தபோது அவன் குடும்பத்துடன் திருச்சி வருவதாகச் சொன்னான்.

ஆனால் சிலநாட்களில் சேகர் மூலம் வந்தது அவன் மறைவு செய்தி!

அவன் குடும்பத்தினர் பற்றிய தவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நைனாவின் குடும்பம் எங்கிருந்தாலும் எல்லா வளங்களும் பெற்று 
நிறைவாக வாழ வாழ்த்திக்கொண்டே இருக்கின்றேன்!

( இந்த நினைவு தொடர்பான பல போட்டோக்கள் காணாமல் போய்விட்டது வருத்தமாய் உள்ளது )

Monday, 10 December 2012

GANGNAM STYLE DANCE

GANGNAM  STYLE  DANCE  - by Celebrities

நேற்று இரவு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது குடும்பத்துடன் கலந்துகொண்ட கிருத்துமஸ் பார்ட்டியில் பாடி, ஆட்டம்போட அழைக்கப்பட்டிருந்தார், ‘கங்னம் ஸ்டைல்’ பாடகர், சை (PSY)

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன்

Madona 

அமெரிக்க ராப் பாடகர் MC Hammer
NBC டி.வி நாத்தலி மொரால்ஸ், அல் ராக்கர்,
டேவிட் கிரெகரி. சவன்னா கொத்ரே

JP
  1. Have some hilarious good fun with Gangnam Style personalized ecard. 
    Visit  www.jibjab.com/holidays/christmas/gangnam_style
     and enjoy your dance!


POSTER OF THIS WEEK


Sunday, 9 December 2012

LESSONS OF LIFE

 I feared failure Until I realized that I only Fail when I don't try.
 I feared success Until I realized That I had to try In order to be happy With myself.
 I feared people's opinions Until I learned that People would have opinions About me anyway.
 I feared rejection Until I learned to Have faith in myself.
 I feared pain Until I learned that it's necessary For growth.
 I feared the truth Until I saw the Ugliness in lies.
 I feared life Until I experienced Its beauty .
 I feared my destiny Until I realized that I had the power to change My life.
 I feared hate Until I saw that it Was nothing more than Ignorance.] I feared love Until it touched my heart, Making the darkness fade Into endless sunny days.
 I feared ridicule Until I learned how To laugh at myself.
 I feared growing old Until I realized that I gained wisdom every day.
 I feared the future Until I realized that Life just kept getting Better.
 I feared the past Until I realized that It could no longer hurt me
 I feared the dark Until I saw the beauty Of the starlight.
 I feared the light Until I learned that the Truth would give me Strength.
 I feared change, Until I saw that Even the most beautiful butterfly Had to undergo a metamorphose is Before it could fly
 I feared being alone Until I learned to like Myself .

EXERCISES

With more than a third of Americans classified as obese, everyone from first lady Michelle Obama to TV news anchor Katie Couric is advocating exercise to maintain a healthy weight.

That's great, says Dr. Eudene Harry, author of "Live Younger in 8 Simple Steps," (www.LivingHealthyLookingYounger.com), but the benefits of exercise go far beyond fitting into those skinny jeans.

For one, it will give you younger looking, more blemish-free skin.

"The increase in circulation and perspiration that occurs with exercise delivers more nutrients to your skin while allowing impurities and waste to be removed," says Harry, who combines years of emergency-room experience with holistic medicine in her private practice. "The result? A healthier complexion!"



She adds four more hidden benefits of a good workout:
  • Natural "feel-good" chemicals: Exercise releases endorphins, the brain chemicals that boost your mood and make you feel happy, as well as relieve stress, and enhance your self-esteem and self-confidence. Exercise has also been shown to increase neurotransmitters, such as serotonin and dopamine, which gives us a natural high and allows us to sleep better.
  • Constipation prevention: Exercise increases the contractions of the wall of the intestine, helping to move things along through the intestinal tract more easily, and decreasing the time it takes to pass through the large intestine. But wait an hour or two after eating before exerting yourself: Exercising too soon after a meal can divert blood flow away from the gut and toward the muscles, weakening peristaltic contractions (and slowing down the digestion process).
  • Prevents brittle bones: Walking, jogging, dancing, weight training and yoga are all weight-bearing exercises that help strengthen bones. Swimming and bicycling are exercises that are considered non-weight bearing. During weight-bearing exercises, bones adapt to the impact of the weight and the pull of muscles by building more bone cells, increasing strength and density and decreasing the risk of fractures, osteopenia and osteoporosis.
  • Enhanced immunity: Physical exertion increases the rate at which antibodies flow through the blood stream, resulting in better immunity against sickness. The increased temperature generated during moderate exercise makes it difficult for certain infectious organisms to survive.

Don't overdo your exercise, or you won't see all of these benefits, Harry says.

"Check with a physician who can advise you on the right activities and intensity level for your individual needs," she says.

"For all the benefits of exercise, there are down sides if you go at it too vigorously for your physical condition. For instance, you can actually increase stress hormones, which can make you more vulnerable to illness, rather than building your immunity."