Wednesday 4 May 2022

கடவுள் வாழ்த்து......13 திரிகடுகம்



 கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்

தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய

மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.
                                                                                -நல்லாதனார்
சகடம் - வண்டி

     உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.

No comments:

Post a Comment