Saturday 31 March 2012

APRIL FOOL

நாளக்கி ஏப்ரல் ஒண்ணாம் தேதி.. முட்டாள்கள் தினம்..
மத்த நாள்ல நாம எப்படி இருக்குறோம்ன்னு ஞாபகப் படுத்திக்க வைக்கிற நாள்.
ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாள் தினமா மாறுன வரலாறு சொல்லப் போறேன்......ஓடிடாதீங்க..
நம்மூர்ல சித்தர மாசம் வருசப் பொறப்பு கொண்டாடுற மாதிரி ஒலகத்துல பல நாட்ல ஏப்ரல் முத தேதிய வருச பொறப்பா கொண்டாடுனாங்க..
கிரிகோரி போப் 1582 ல காலண்டர சீர்திருத்தி புதுசா காலண்டர் போட்டாரு..அதுல ஜனவரி ஒண்ணாந் தேதிதான் ஒவ்வொரு வருசத்தோட மொத நாளுன்னு சொல்லிட்டாரு..பிரான்ஸ் இன்னும் சில நாடுகள் உடனே இதை follow பண்ண ஆரம்பிச்சுடுச்சு...
இப்ப இருக்குற கம்யூனிகேசன் அப்ப இல்லாததால பல நாட்ல பழையபடி ஏப்ரல் ஒண்ண புத்தாண்டு தினமா கொண்டாடிக்கிட்டுருந்தாங்க..புது காலண்டரு வச்சுக்கிட்டுருந்தவங்க இவங்களப் பாத்து கேலி, கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க..இவங்கள முட்டாளாப் பாத்தாங்க..
இப்படிதான் ஏப்ரல் ஒண்ணாம்தேதி முட்டாள் தினமா வந்துச்சி..அப்புறம் இந்த தேதியில மத்தவங்கள ஏமாத்தி வேடிக்க பாக்கறதும் வழக்கமாச்சு..

கீழ இருக்குற ஜோக்குல இருக்குற தத்துவத்தைப் புரிஞ்சிக்காதவங்க
ஏப்ரல் ஃபூல்!

நம்ம சர்தாரு அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.அதனாலே தங்கிட்டு காலேல போ..சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்துகொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டேதிரும்பினார்..நண்பர் கேட்டார்.." எங்கே நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?' சர்தாரு சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!







4 comments:

  1. Priya, did you find out the தத்துவm in the joke???

    ReplyDelete
    Replies
    1. what KG? U didn't find out the தத்துவm?:):):)

      Delete
    2. No Priya, i didn't find தத்துவm, that's y asking you :)

      Delete