Friday 9 March 2012

அஞ்ஞானம் - 1

ரொம்ப பேரு அஞ்ஞானத்த ignorance ன்னு நெனச்சுக்கிட்டுருக்காங்க..
Ignorance ன்னா தெரிஞ்சிக்கிட்டே திரும்ப, திரும்ப ஒரே தப்பை செய்றது..
Ignorance ன்னா அலட்சியம் ன்னு பேரு...இருந்தாலும் அஞ்ஞானத்தை ignorance ன்னு அர்த்தம் பழகிட்டதாலே அதையும் பாக்கலாம்..
அஞ்ஞானம் ன்னா அறியாமை, மாயை, துன்பங்களுக்கு காரணம் அப்படீன்னு
எடுத்துக்கலாம்..
அஞ்ஞானத்தைப் பத்தி சொல்ல நெறைய இருக்கு...
அப்பப்ப இது பத்தி post ல போடறேன்
ஓஷோ சொன்னதுல கொஞ்சம் இங்க தந்துருக்கேன்..
இப்பதிக்கு படிச்சு வச்சுக்குங்க.. முடிஞ்சா இதுல எப்புடி அஞ்ஞானமுன்னு யோசிச்சுக்கிட்டுருங்க.. !!
(அஞ்ஞானத்தை அறுக்க சில அறுவைகளைத் தாங்கிக் கொள்ள
பழகவேண்டும்! )



யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது. இது எதனால்? மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது. ''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல: நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது. யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது, ''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!'' எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள். 'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள். அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள். யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால், நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள். செய்தி உண்மையானது என்றாலும், ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான். யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார். அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும், என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள். இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும். எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:எல்லோரையும் நிந்திப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.

10 comments:

  1. is the second part of your post from Osho?

    ReplyDelete
  2. one more question from a தமிழ் அஞ்ஞானி :)

    How do you pronounce அஞ்ஞானம்? I thought ஞ் is pronounced 'inj'

    btw...learned a new word today.."அஞ்ஞானம்" :)

    ReplyDelete
    Replies
    1. Next part will not be from Osho...
      Hope you pronounced விஞ்ஞானம்
      அஞ்ஞானம் is to be prononced in the same way...
      As many people are afraid, my next post on அஞ்ஞானம் will be after sometime.

      Delete
    2. oh...thanks...forgot about விஞ்ஞானம் :)

      many people are afraid?? afraid of what??

      Delete
    3. All are afraid of அஞ்ஞான அறுவை!

      Delete
  3. JP,

    is மெய்ஞானம் opposite of அஞ்ஞானம் ?

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ல எதிர்சொல் எழுத சில வார்த்தைக்கு முன்னாடி "அ" போட்டால் போதும் -

      உதாரணம் -

      நீதி X அநீதி
      காலம் X அகாலம்
      இதுபோல

      ஞானம் X அஞ்ஞானம்

      நைட்டிக்கு எதிர்சொல் என்னா தெரியுமா...?
      ..
      ..
      ..
      ..
      பகல்டா...!

      Delete
  4. JP,

    STDக்கு எதிர்சொல் என்னா தெரியுமா...?
    ..
    ..
    ..
    ..

    No-coffee-da...!

    ReplyDelete
    Replies
    1. hahaha....like both the நைட்டி / பகல்டா.. and STD / No-coffee-da

      I think i'm finally going to learn தமிழ் in this blog :)

      Delete
  5. on a serious note JP, what do you think of அஞ்ஞான person? Are they having complexity problem or attitudinal problem? or "ME The Great" mind-set?

    ReplyDelete