Friday 23 March 2012

ஜீவ சமாதி

மகரிஷி மணிமண்டபம், ஆழியார்

ஜீவ சமாதி அப்டீன்னா என்னான்னு ரெண்டு பேரு கேட்டாங்க –
சமாதின்னா செத்து போனவங்களப் புதைச்ச இடமுன்னு சொல்லுவாங்க..
ஜீவசமாதின்னா உயிரோட புதைக்கிறதா? அது கொலை இல்லையா?

வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து இறைநிலையை உணர்ந்து இனி
வாழ்ந்தது போதும்ன்னு நினைக்கும் மகான்கள், தங்கள் சிஷ்யகோடிகளிடம்
ஒரு நல்லநாள் குறித்துக் கொடுத்து சமாதியில் அமர்வார்கள்.

உடல் இயக்கத்தையும், மன இயக்கத்தையும் நிறுத்தி, உயிர் மாத்திரம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும்படி செய்து கொள்ளுவார்கள். இதுவே ஜீவசமாதி.

இவர்கள் அமர்ந்த இடத்தின்மீது கோவில் அமைக்கப்படும்போது
அந்த கோவிலில் ஆற்றல் களம் அபரிமிதமாக இருக்கும். அப்படிப்பட்ட கோவில்கள்தான் திருப்பதி, பழனி போன்ற எண்ணற்ற கோவில்கள்..இப்படி சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த கோவில்களுக்கு குடமுழுக்கு தேவை இல்லை.

சித்தக்காட்டுல ஒரே இடத்துல 63 பேரு ஜீவசமாதி அடைஞ்சிருக்காங்க..!

11 comments:

  1. beautiful mani mandapam for Maharishi!

    ReplyDelete
  2. Uncle,

    How abt the 'Ramanujar' sannathi in Sriram Ranganathan Temple?
    Could u please explain more about "உடல் இயக்கத்தையும், மன இயக்கத்தையும் நிறுத்தி, உயிர் மாத்திரம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும்படி செய்து கொள்ளுவார்கள்." ?

    Thanks Uncle,
    Sripriya.

    ReplyDelete
    Replies
    1. Good question Priya :)) Waiting for JP's response now.

      Delete
    2. Me too have same Q as Priya...

      Delete
    3. காயகல்ப பயிற்சியில் சொல்லப்பட்ட சில விஷயங்களை இங்கே ஞாபகப் படுத்துகின்றேன்-
      ஜீவவித்துக்குழம்பு உடலில் இருக்கும் மட்டும்தான் உடலில் உயிர் இருக்கும். இது முழுதும் உடலிலிருந்து வெளியேறிவிட்டால் அதுதான் மரணம். So , மரணத்தை தள்ளிப் போட போதிய அளவு தரத்துடன் ஜீவவித்துக்குழம்பை உடலிலே தக்க வைத்துக் கொள்வதன் மூலம்
      முடியும்.
      இதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருங்கள். விரிவாக விரைவில் எழுதுகிறேன்.

      Delete
    4. @ Sripriya
      ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் சந்நிதியில் இருப்பது அவர் சிலை இல்லை...
      1000 ஆண்டுகளுக்கு முன் அவர் எப்படி அமந்திருந்தாரோ அதே நிலையிலே இருக்கும் தூல உடல்.. ஜீவசமாதியில் இருக்கிறார் என்று சொல்கின்றார்கள்.
      அப்படி பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளாக அவர் உடல் கெடாமல் இருக்கின்றது..
      அங்குள்ள அர்ச்சகர்கள் அவர் உடலில் உரோமங்கள் வளர்ந்திருப்பதையும், நகங்கள் வளர்ந்திருப்பதையும் கண்டு அவர் உடலுக்கு பச்சை கற்பூரம் & குங்குமப்பூ கலந்த சாந்தை அவ்வப்போது பூசி சரிபடுத்துவதாக சொல்கிறார்கள்.
      உண்மையை வெளிக்கொணர ஆராய்ச்சிகள் செய்ய அனுமதி மறுக்கின்றார்கள்.

      Delete
  3. Previous post and this posts are interesting. I thought only one சித்தர் had ஜீவசமாதி in சித்தக்காட்டு.

    ReplyDelete
  4. what is ஜீவவித்துக்குழம்பு?

    And, is it left to us to keep or exit ஜீவவித்துக்குழம்பு?

    ReplyDelete
  5. thanks for sharing...

    கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய

    http://spiritualcbe.blogspot.in

    ReplyDelete