Thursday 29 March 2012

எறும்பும் யானையும்

சிறு உருவம் கொண்ட எறும்பு முதல் பெரிய உரு கொண்ட யானை வரை
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இறைவனை வழிபட்டதாக
தமிழ்நாடெங்கும் பலப்பல கோவில்கள் உள்ளன, திருச்சியில் எறும்பு வழிபட்ட திருவெறும்பூர்
கோவிலும் யானை வழிபட்ட திருவானைக்காவல் கோவிலும் உள்ளன..
( மனிதன் மனிதனாக வாழ, தன்னில் உறையும் இறைவனை உணர நாங்கள் எழுப்பிய
அறிவுத் திருக்கோவிலும் இங்குதான் உள்ளது..)

திருவெறும்பூர்

1500 வருசத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட மலைக் கோயில்.. தேவர்கள் எறும்பு வடிவில் இறைவனை வழிபட்டதாக தல வரலாறு..சிவலிங்கம் எறும்பு புற்றினால் ஆனது.. எனவே அபிஷேகம் கிடையாது. அப்பர் இந்த கோவிலுக்கு வந்து தேவாரம் பாடியிருக்கார்.
ராபர்ட் கிளைவ் இந்த கோயிலில் தன படைகளோட தங்கியிருந்து பிரெஞ்சுகாரங்களோட சண்டைப் போட்டு அவங்களை விரட்டி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் காலூன்ற வைத்தான். சரித்திரத்தில் இடம் பெற்ற ஊர்.
திருவானைக்காவல்

இந்த ஊர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று.. அம்பாள் தண்ணியையே லிங்கமாப் பண்ணி வழி பட்டதா கதை.!
பெரிய்ய கோவில்! அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தம்..
சிவலிங்கம் தண்ணீரில் இருக்கும்..
யானையும், சிலந்தியும் வழிபட்டதாக கதை..

தெனம் யானை காவிரியிலிருந்து தும்பிச்சி கைல தண்ணி புடிச்சி
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணும்.. சிலந்தி லிங்கத்துக்கு மேல
வலை பின்னி சாமி மேல ஒண்ணும் விழாமப் பாத்துக்கும்.
யானை அபிஷேகம் பண்ணும்போது வலை வீணாப் போயிடும்..
இதனால சிலந்திக்கு கோபம் வந்து யானையோட தும்பிக்கைல பூந்துக்கிட்டு
யானையைக் கொன்னுடிச்சு.. சிலந்தியும் செத்துப் போச்சு..சாமி ரெண்டுத்துக்கும்
வரம் கொடுத்தாரு.. யானைக்கு ஸ்ட்ரைட்டா சொர்க்கம்..! சிலந்தி கோபப்பட்டதால
அது சோழ மன்னனாப் பொறந்து இந்த கோவிலைக் கட்டிச்சு..
யானை சாமிகிட்ட வராதபடி சின்ன வாச வச்சி பழி தீத்துகிச்சு..
( சிலந்திதான் சோழன் கோச்செங்கண்ணான் மன்னனாகப் பிறந்து சிவனுக்குப் பல கோவில்கள் கட்டியதாக
சொல்லுவார்கள். இவன் கட்டிய எல்லா கோவிலிலும் சாமி சன்னதிக்கு யானை வரமுடியாதபடி சிறிய வாசல் இருக்கும் )




BHEL அறிவுத்திருக்கோவில்











4 comments:

  1. Interesting I never know that சிலந்தி became சோழ மன்னன. Nice one JP.

    ReplyDelete
  2. the girls were very interested in going to the எறும்பு கோயில் every time we passed by but unfortunately we never made it...maybe next time...whenver that may be..

    luved the யானை சிலந்தி கதை :) I remember when we went to Thiruvanaikaaval, the elephant had just died. On entering the temple, there was a looooong line and thinking it was the line for swami dharshan we waited for few mins only to find it was the line for elephant dharshan...

    one thing I greatly miss living here are the temples. Although there are temples here, it just doesn't feel the same as our ancient Indian temples

    ReplyDelete
    Replies
    1. இப்ப கோவில்ல "அகிலா"ன்னு யானைக்குட்டி இருக்கு..
      CM அம்மா டொனேட் பண்ணுனாங்க..!

      Delete
  3. அப்பாயி யானை-சிலந்தி கதை சொன்னது ஞாபகம் இருக்கு :))

    ReplyDelete