Wednesday 14 March 2012

சிரிப்பு ஞானம் - 1

ஒருத்தனை சிரிக்க வச்சுட்டா அதுவே ஒரு பெரிய தொண்டு!


ஓஷோ சொல்லுறாரு –

"மனுசன் இப்ப ரொம்ப, ரொம்ப சீரியஸ் ஆயிட்டான்..அவனுக்கு சிரிக்கிறது அப்டீன்னு என்னான்னே தெரியல...ஒரு மணி நேரம் தியானம் செய்றதக் காட்டிலும் ஒரு செகண்ட் உங்ககிட்டேருந்து வரக்கூடிய குபீர்/ வெடி சிரிப்பு ரொம்ப எபக்டிவ்... ஞானங்கிறதே ஒரு பிரபஞ்ச சிரிப்புதான்..!”

அவரு சொன்ன முல்லா நசுருதீன் ஜோக்கு -

முல்லா நசுருதீன் ஒரு பல் டாக்டரிடம் சென்றார்...."ஒரு பல் புடுங்க எவ்வளவுங்க?" என்றார்"நானூறு ரூபாய்" ...."ஆனால் வலிக்காமல் இருக்க ஒரு ஊசி போடுவோம்...அதுக்கு முன்னூறு ரூபா எக்ஸ்ட்ரா"என்றார் டாக்டர்...“ஊசியெல்லாம் வேண்டாம்...அப்படியே எடுத்துருங்க....முன்னூறு ருபாய் மிச்சம்""கிராமத்து மக்கள் வலிமையானவர்கள் என்று கேட்டிருக்கிறேன்...நீங்க ரொம்ப தைரியமானவர்...உங்கள் வலிமையை பாராட்டுகிறேன்" என்றார் டாக்டர்..."ரொம்ப புகழ்றீங்க டாக்டர்....அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்....பல் புடுங்க வேண்டியது என் மனைவிக்கு"என்றார் முல்லா....

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது
பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூடபேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளேஅமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதானகுற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாகமுடிந்த மகிழ்ச்சியில்” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்குநான் போவது?” என்று கேட்டார்..


2 comments:

  1. Link for the picture
    http://i.imgur.com/O0M1K.gif

    ReplyDelete
  2. Me prefer குபீர் சிரிப்பு anytime anyday to anything..

    ReplyDelete