Tuesday 12 April 2022

அம்மாவின் டைரியிலிருந்து.....6

அம்மா எல்லா பத்திரிகைகள், புத்தகங்கள், செய்தித்தாள்கள் அனைத்தும் படிப்பார்கள்.  படித்ததிலிருந்து பல குறிப்புகள் எழுதி வைத்திருக்கின்றார்கள். மருத்துவ குறிப்புகள் நிறைய டைரியில் உள்ளன. அவற்றில் ஒன்று கீழே... 


பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்

அருகம்புல் சாறு – இது ரத்தத்தை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும், மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும். மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிறுநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் எடையை குறைக்கும். ஊளைச் சதையை குறைக்க உதவும்.

வெ பூசணிசாறு
– குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சம்பந்தபட்ட நோய்களை நீக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கும்

வில்வம் சாறு
– அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு சம்பந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைக்கவல்லது சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அனைத்து ரத்த சம்பந்தமான, வாயு சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேறித்தனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு
- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணப்படுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை வாயில் மென்று  உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால், உடனடியாக மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடை சாறு
- ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு
- கண் பார்வைக்கு நல்லது, முடி வளர்ச்சிக்கு நல்லது

No comments:

Post a Comment