Saturday 2 April 2022

கற்பனை ( அப்பர் )

 தேவாரத்தில் அப்பரின் கற்பனை



நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்சை யென்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

–திருவாரூர்ப் பதிகம்

 

பொருள்:-

சிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது! சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில்  வீற்று இருக்கிறான்.

No comments:

Post a Comment