Monday 18 April 2022

கடவுள் வாழ்த்து.....1 - பாரதியார்

 




எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்; 

மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன் மணியென் மாசகதி வையத்தேவி;

 தின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் செவய்யமணித் தாமரை நேர் முகத்தாள்; காதல்

 வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும் வண்டியைப்போல் எனையுமுரு மாற்றி

 விட்டாள்.


 தீராத காலமெலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி, 

நீராகக் கனலாக வானாக் காற்றா நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது 

போராக நோயாக மரண மாக போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்

 நேராக மோனமஹா னந்த வாழ்வை நிலத்தின்மிசை அளித்தமரத் தன்மை ஈவாள்.


 மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,

 பாகார்ந்த தேமொழியாள்,படருங் செந்தீ பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி,

 ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள் ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,

 சோகாட விக்குளெனைப் புகவொட் டாமல் துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.

No comments:

Post a Comment