Saturday 23 April 2022

கடவுள் வாழ்த்து.... 4 - திருமந்திரம்


 

ஒன்று அவன் தானே ; இரண்டு அவன் இன்னருள்;

நின்றனன் மூன்றினுள் ; நான்கு உணர்ந்தான் ; ஐந்து

வென்றனன் ; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்

சென்றனன் ; தானிருந் தான் உணர்ந்து எட்டே


எங்கும் எல்லாத்திலும் எல்லா உயிரினும் பரம்பொருள் ஒன்று, 
அந்த பரம்பொருள் அவன் தானே

அப்பரம்பொருளை ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
சூரியன் சந்திரன், ஆண் பெண், இன்மை மறுமை, இன்பம் துன்பம் என இரண்டு இரண்டற 
இனபத்தை அருளும் இன்னருள்
சிவன், விஷ்ணு, பிரம்மன் என்ற மூன்றாக படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்றினுள் நடுவே பரம்பொருளாக நின்றனன்
நின்றனன் மூக்காலமும் குறிப்பிடும் எக்காலத்திலும் நின்றனன்

அறம் பொருள் இன்பம் வீடு நான்கும் நான் கும் உணர்ந்தான்

நீர் நெருப்பு காற்று மண் ஆகாயம் இன்றி எதுவுமில்லை சிவாய நம, நம சிவாய வார்த்தையில் வென்றனன்

ஆறு விரிந்தனன் ஆறு உலகலோகமாய் விரிந்தனன் அண்டத்தில் ஆறு சக்தி பீட சக்கரமாய் விரிந்தது பிண்ட உடலில்

*ஏழு உலகலோகத்திற்கு மேலானவர்
வானவர் தாமரை அடுக்கு மலரான இதழ்க்கு சிரசின் மேல்வெளி விளக்காய் விளங்க தானே உணர்ந்த 

எட்டான சித்தியில் பிண்டமாய்
எட்டான வானவர்கள் அண்டமாய் தான் உணர்ந்த எட்டே
எட்டினால் காணலாம் இறையே*

No comments:

Post a Comment