Friday 29 September 2023

அய்யா காதர் மீரா சாஹிப் - அறுபதாயிரம் கோடிகள் ரூபாய் பெருமதிப்பிலான இடத்தை தானம் செய்தவர்

இந்தியாவிலேயே அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் முக்கியமானது.... *திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை.*

*2400 படுக்கை வசதிகளைக் கொண்டது.*

*இந்த கல்லூரியையும், மருத்துவமனையையும் கட்டுவதற்கு காமராஜர் முடிவெடுக்கிறார்.*

*திருநெல்வேலியில் அதற்கு பொருத்தமான இடம் தேடுகிறார்.*

*காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் அவர்கள்,*

*தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார்.*

*அந்த நிலப்பகுதியே இன்று நெல்லையில் "ஹைகிரவுண்ட்" என அழைக்கப்படுகிறது.*

*அங்குதான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் இன்று இயங்குகிறது.*

*இன்று அந்த இடத்தின் விலைநிலவரமோ ஒருசென்ட் 15 முதல் 20 லட்ச ரூபாய்.., --30,000 சென்ட் × ₹ 20,00,000 × 60,00,00,00,000 அறுபதாயிரம் கோடிகள் ரூபாய் பெருமதிப்பிலான இடத்தை தானம் செய்தவர்*

*அய்யா காதர் மீரா சாஹிப் இன்றைய தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்

 

No comments:

Post a Comment