Friday 7 September 2012

தெரியாத செய்தி - 1

                                   15 ரூபாய் நோட்டு  

தமிழ்நாட்டில் 15 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது தெரியுமா?

1843 ஜூலை மாதம் முதல் தேதியில் அன்றைய சென்னை மாகாண அரசு சென்னை வங்கி யைத் தொடங்கியது. அதே போல் வங்காள வங்கி கல்கத்தாவிலும், பம்பாய் வங்கி பம்பாய் நகரத்-திலும் தொடங்கப்பட்டன. மூன்று வங்கிகளுக்கும் அன்றைய முதலீடு 30 லட்சம் ரூபாக்கள் மட்டுமே! பிரிட்டிஷ் அரசு வங்கிகள் 1806 ஆம் ஆண்டிலிருந்துதான் இந்தியாவில் செயல்-பட்டன. இதற்கு மாற்றாகத்தான் மூன்று வங்கி-களும் தொடங்கப்பட்டன. இவை தொடங்கப்-பட்டதும் முந்தைய வங்கிகள் மூடப்பட்டு-விட்டன. அந்தக் காலத்தில் நாள் ஒன்றுக்கு, இந்த வங்கிகளில் 23 லட்சம் ரூபா வரை வணிகம் (TRANSACTIONS) நடந்துள்ளன.
.
சென்னை வங்கியின் சார்பாக வெளியிடப்-பட்டதுதான் 15 ரூபா நோட்டு. 1817 இல் இருந்து 1827 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் சர். தாமஸ் மன்றோ. சேணமே இல்லாத குதிரையில் ஏறி அவர் அமர்ந்-திருக்-கும் தோற்றச் சிலை. சென்னை, தீவுத்-திடலில் இன்றும் நாம் பார்க்கிறோம். சென்னை நகரின் சின்னம் என்றே கூறத்தக்க வகையில் உள்ள சிலை அது. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது குதிரை மேல் அமர்ந்த நிலை படம் பொறித்து 15 ரூபா நோட்டுகளை வங்கி வெளி-யிட்டது. தமிழ், தெலுகு, உருது மற்றும் இங்கி-லீஷ் ஆகிய மொழிகளில் 15 எண் நான்கு மூலைகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.

15 ரூபாய் நோட்டு 

Bank of Madras 1843
Now

3 comments:

  1. JP,

    It's really "one-of-a-kind-Madras-news". First time hearing about 15 Rs. note.

    TFS :)

    ReplyDelete
  2. what does "சேணமே" mean??

    ReplyDelete
    Replies
    1. Leather seat - saddle - சேணம்

      Delete