அறிவற்ற செயல்களில் நம்பிக்கை கொண்டு வாழ்வது மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைக்கு எதிராகப் பாட்டுக்குரல் கொடுத்துள்ளார் பாரதிதாசன். | |
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற | |
(பாரதிதாசன் கவிதைகள், 42 பெண்குழந்தைத் தாலாட்டு - 8) | |
மூடத்தனம் மக்களிடம் தொடர்ந்து வந்து தேங்கியுள்ளது. எனவே அது முடைநாற்றம் வீசுகிறது என்று இந்தப் பாடலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இந்த முடைநாற்றம் போகவேண்டும் என்றால் நம்மை விட்டு மூடத்தனம் அகலவேண்டும். அதன் பின்னர் அங்கே பகுத்தறிவு தோன்றும். இதைப் பெண் குழந்தைத் தாலாட்டில் பாரதிதாசன் பாடியுள்ளார். பெண்களிடம் காணப்படுகின்ற மூடத்தனத்தைப் பெண்களே போக்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெண்குழந்தையை நோக்கிப் பாடியுள்ளார் பாரதிதாசன். |

No comments:
Post a Comment