Thursday, 6 November 2025

நண்பேண்டா

 நண்பேண்டா அலப்பறைகள் !

நைட்டு 12 மணி இருக்கும் .........

என் பிரெண்டப்போல யாரு மச்சான்!

(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

"ஹலோ சொல்றா எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கண்டா ..... "

"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

"அது ஒன்னும் இல்லை இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி "

"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிறேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை

"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி அதுக்கு என்ன ?"

"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

"டேய் உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "

"அது இல்ல , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி ......"

"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "

"டேய் .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "

"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது .................டென்சனா போன ஆன் பண்ணி

"என்னடா ?"

"சாரி கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"

"டேய் ............நீ கோயமுத்துர்ல இருக்க, நான் இங்க கன்னியாகுமரி'ல இருக்கண்டா "

"இல்லை கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு

இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டான் "

“டேய்ய்ய்ய்..

No comments:

Post a Comment