சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி
கொல்லை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீந்தினியோ
எற்றடி கொற்றமுற்றே பிரிவை
சாபமாய் தந்தனையோ
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே
பொன்னியின் செல்வன் Part 2 Song Lyrics
to see the video of this song, pl click here

No comments:
Post a Comment