Friday 20 July 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 10

ஊட்டி  நினைவுகள்


சுவிஸ் போய் வந்த சில வருசத்துக்குப் பிறகு ஊட்டி சென்றோம்குன்னூரிலிருந்து ஊட்டி செல்ல மலை ரயிலுக்காக காத்திருந்தபோது ஒரு ஜெர்மனி குடும்பத்தோடு பேசிக் கொண்டிருந்தோம்ஸ்டேசனுக்கு அருகில் இருந்த காய்கறிக் கடையில் இருந்த விதவிதமான
காய்களைப்  பார்த்து   ஜெர்மனிப் பெண்கள்  மாலாவிடம் குறிப்பாக புடலங்காய், பூசணிக்காய் எப்படி சமைப்பது என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஜெர்மனியில் இருந்து வந்தவரும், நானும் டிக்கெட் கவுண்டரில் நின்று கொண்டிருந்தோம். அந்த ஜெர்மானியர் பென்ஸ் கார் கம்பெனியின் Finance Dept ல் முக்கிய அலுவலர். புனே செல்வதற்கு முன் ஊட்டி வந்ததாகச் சொன்னார். நான் என்னுடைய சுவிஸ், ஜெர்மனி அனுபவங்களை அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
டிக்கெட் கவுண்டர் திறந்தவுடன் முதலில் அவர் டிக்கெட் வாங்கினார்

கவுண்டரில் இருந்தவரிடம் இவர் argue  பண்ண  ஆரம்பித்துவிட்டார். விஷயம் என்னவென்றால் இவர் ஊட்டிக்கு நாலு டிக்கெட் கேட்டு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். கவுண்டரில் இருந்தவர் டிக்கெட்டும் பாக்கித் தொகையும் கொடுத்திருக்கின்றார். " நீங்கள் எனக்கு மிக அதிகமாக பாக்கி கொடுத்துவிட்டீர்கள் "  எனச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். கவுண்டரில் இருந்தவரோ " நான் சரியாகத்தான் உங்களிடம் பணம் வாங்கியுள்ளேன் " எனச் சொல்லிக்கொண்டிருந்தார்

குன்னூர் to ஊட்டி train  fare  அப்போது எட்டு ரூபாய் மட்டுமே.

ஜெர்மன்காரரால் இதை நம்ப முடியவில்லை. எங்கள் நாட்டில் இப்படிப்பட்ட மலை ரயிலுக்கு குறைந்தது ஐம்பது ஃபிரான்க் தரவேண்டியிருக்கும் எனத் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே வந்தார்.
இங்கு ஒரு நாள் உணவுக்கு அதிகப் பட்சம் ஐந்து ஃபிரான்க்  மட்டுமே செலவாகின்றது என்பதும் அவருக்கு ஆச்சரியம்.

என்னிடம் அவர் கேட்ட கேள்விகள் இன்னும் ஞாபகத்தில் உள்ளது -
இவ்வளவு cheap பாக train fare  மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தால் எப்படி அரசாங்கம் நடக்கும்?
இந்தியாவில் ரோடுகள் சரியில்லாததால் எங்கள் பென்ஸ் கார்களை எப்படி பயன் படுத்துவீர்கள்?



Some  photos taken at Otty



Mala with the German & Family photo  1995





1 comment: